சகோதரர், வேலையாள் மற்றும் சேவகன்

ஒரு போதகர்கள் மாநாட்டில், மிகப்பெரிய சபையின் போதகர் ஒருவர் இப்படியாக முழக்கமிட்டார்; “நான் உதவி போதகர்கள் யாரையும் ‘தூண்கள்’ என்று அழைப்பதில்லை.  நான் அவர்களை தூண்கள் என்று அழைத்தால், அவர்கள் கட்டிடத்தை (சபையின் ஒரு பகுதியை) உடைத்து விடுவார்கள்.  நான் அவர்களை என் காலணிகள் என்று அழைக்கிறேன்.  ஏனென்றால் என் பழைய பயனற்ற காலணிகளை நான் தூக்கி வீச முடியும்". துரதிர்ஷ்டவசமாக, பல போதகர்கள் இந்த முட்டாள்தனமான அறிக்கையைப் பாராட்டினர்.  பவுல் எப்பாப்பிரோதீத்துவை பற்றி, " என் சகோதரனும், உடன்வேலையாளும், உடன்சேவகனும், உங்கள் ஸ்தானாபதியும், என் குறைச்சலுக்கு உதவிசெய்தவனும்..."  என்பதாக எழுதுகிறார் (பிலிப்பியர் 2:25). சக கிறிஸ்தவர்களும் சக ஊழியர்களும் எவ்வாறு மதிக்கப்பட வேண்டும், போற்றப்பட வேண்டும், வளர்க்கப்பட வேண்டும், நேசிக்கப்பட வேண்டும், பராமரிக்கப்பட வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ள நுண்ணறிவைத் தரும் மூன்று அம்சங்கள்.

1) சகோதரன்:

பவுல் எல்லா விசுவாசிகளையும், குறிப்பாக உடன்-வேலையாட்களை கர்த்தரில் சகோதர சகோதரிகளாகக் கருதினார்.  சிரியாவில் உள்ள விசுவாசிகளைத் துன்புறுத்தும் பணியில் அவர் பார்வையற்றவராக ஆனபோது இந்த உன்னத உறவை அவர் புரிந்துகொண்டார். ஆம், துன்புறுத்துபவனும், கொலைகாரனுமான சவுலை (பவுல்) ‘சகோதரன்’ என்று அனனியா அழைத்தார் (அப்போஸ்தலர் 9:17). அது சவுலின் காதுகளில் இனிமையான இசையாக ஒலித்திருக்கும், அது உண்மையாகவே விலைமதிப்பற்ற வார்த்தை.  கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் சுத்திகரிக்கப்பட்ட அனைவரும் சகோதர சகோதரிகள் என்பதை அவர் கற்றுக்கொண்டார்.  சாதி அல்லது குலத்தின் அடுக்கு நிலை இல்லை.  கிறிஸ்தவ அமைப்பின் தலைவர்கள் மற்றும் போதகர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களை சிறப்புடன் நடத்துகிறார்கள், ஆனால் அதே நேரத்தில் மற்றவர்களிடம் பாகுபாடு காட்டுகிறார்கள்.

2) வேலையாள்:

ஆண்டவர் தனது திராட்சைத் தோட்டத்தில் (பரலோக ராஜ்யம்) வேலை செய்ய அனைத்து கிறிஸ்தவர்களையும் அழைத்துள்ளார்  (மத்தேயு 20:1-16). நாளின் வெவ்வேறு மணிநேரங்களில் வேலை செய்ய ஆட்கள் அழைக்கப்படலாம், ஆனால் அவர்களின் தேவைக்கேற்ப ஊதியம் வழங்கப்பட்டது.  வேலையாட்களாகிய நாம் அனைவரும் ‘லாபமற்ற’ அல்லது 'அப்பிரயோஜனமற்ற' வேலையாட்கள்; நாம் அழைக்கப்பட்ட, அபிஷேகம் செய்யப்பட்ட, ஒதுக்கப்பட்ட மற்றும் செய்ய நியமிக்கப்பட்ட வேலையைச் செய்ய கடமைப்பட்டுள்ளோம் (லூக்கா 17:10).

3) சேவகன்:

அனைத்து விசுவாசிகளுக்கும் சாத்தானுக்கு எதிரான யுத்தம் உண்டு. "ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு". ஆனால் எதிரி இருப்பது உண்மை, ஒரே ஒரு எதிரி அது சாத்தான்.  நடுநிலையான மைதானம் இல்லை அல்லது யுத்த மண்டலம் இல்லை அல்லது சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் ஆணைப்படியான அமைதிப் பகுதி இல்லை. தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தை  அணிந்துகொண்டு, நாம் எப்போதும் விழிப்புடனும், சுறுசுறுப்புடனும், ஜாக்கிரதையுடனும் இருக்க வேண்டும் (எபேசியர் 6:10-18).

மற்ற விசுவாசிகளை மதிப்புடனும், உயர்வுடனும், கனத்துடனும் மற்றும் மரியாதைக்குரிய சகோதரர்களாகவும் மற்றும் ஆசிரியர்களாகவும் கருதுவதற்குப் பதிலாக, அவர்களை இழிவாக நடத்தலாமா!

நான் சக விசுவாசிகளை கிறிஸ்துவில் சகோதர/சகோதரிகளாக, சக வேலையாளாக மற்றும் சேவகனாக பார்க்கிறேனா?

Author: Rev. Dr. J. N. Manokaran