தேவனைப் பரீட்சித்துப் பார்த்தார்கள்

கலகக்கார தேசமான இஸ்ரவேல், குறைந்தது பத்து முறையாவது கர்த்தரை மீண்டும் மீண்டும் பரீட்சித்துப் பார்த்தது (எண்ணாகமம் 14:20-23).  விசித்திரமாகவும் ஆச்சரியமாகவும்; எகிப்தின் முன்னாள் அடிமைகள் தங்களை தேவன், உலகில் அவருடைய பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தேசமாக கொண்டதை உணர முடியவில்லை.

1) பார்வோனைக் கண்டு பயம்:
தேவன் எகிப்து தேசத்தை பத்து வாதைகளுடன் நியாயந்தீர்க்கிறார்.  இருப்பினும், அடிமையின் இலவச சேவைகளை விட்டுவிட பார்வோன் தயாராக இல்லை. எனவே, அவர்களை பின்தொடர்ந்தனர்.  இஸ்ரவேலர்களும் அவநம்பிக்கையையே வெளிப்படுத்தினர், பார்வோனைக் கண்டு பயந்தார்கள் (யாத்திராகமம் 14:10-12)

2) கசப்பான நீர்:
வனாந்தரத்தில், மாராவின் தண்ணீர் கசப்பாக இருந்ததினால், ​​அவர்கள் மோசேக்கும் ஆரோனுக்கும் எதிராக முறுமுறுத்தனர் (யாத்திராகமம் 15:22-24). 

3) பசி:
எகிப்தில் அவர்கள் கைக்கும் வாய்க்கும் தான் உணவு சரியாக இருந்தது. ஆனால் அவர்களுக்கு அங்கு வைத்திருந்த சிறந்த உணவுகளின் மீது கற்பனையான ஏக்கம் இருந்தது (யாத்திராகமம் 16:1-3)

4) மன்னா தினசரி உணவு:
மன்னாவைச் சேகரித்து ஒரே நாளில் உண்ணும்படி ஆண்டவர் கட்டளையிட்டார். ஆனால் அவர்கள் தேவனின் வழிநடத்துதலுக்கு எதிராக சேமித்து வைக்க முயன்றனர், அது பூச்சி பிடித்து நாற்றமெடுத்தது (யாத்திராகமம் 16:19-20). 

5) ஓய்வுநாள்:
ஓய்வுநாளில் மன்னா கிடைக்காத போதிலும், அவர்கள் ஓய்வுநாளில் மன்னா சேகரிக்கச் சென்றார்கள், ஆனால் எதுவும் கிடைக்கவில்லை (யாத்திராகமம் 16:27-30). 

6) தண்ணீருக்கான புகார்:
ரெவிதீமில் அவர்களுக்கு குடிக்க தண்ணீர் இல்லாதிருந்தது, மோசேவோடு குடிநீருக்காக இஸ்ரவேலர்கள் கலகம் செய்தனர்.

7) தங்க கன்று:
அவர்கள் ஜீவனுள்ள தேவனை நிராகரித்தனர், மோசே தேவ சமூகத்தில் பத்துக் கட்டளைகளைப் பெற சென்ற நேரத்தில், ​​தங்களை வழிநடத்த கடவுள்களை உருவாக்க ஆரோனை நிர்பந்தித்தார்கள்.  ஆரோனும் விருப்பத்துடன் தங்க கன்றை உருவாக்கினான், அது பொய்யான வழிபாடு வெளிக்கொணரப்பட்டது (யாத்திராகமம் 32:1-35).

8) முணுமுணுப்பு:
தபேராவில் கர்த்தருக்கு எதிராக முணுமுணுத்து, தங்கள் துரதிர்ஷ்டத்தைப் பற்றி புகார் செய்தார்கள். அவர்களைப் பொறுத்தவரை, தேவனுக்கு ஊழியம் செய்வதும் சுயாதீனமும் வெறுமனே துரதிர்ஷ்டம்.

9) இறைச்சி கோருதல்:
கிப்ரோத் அத்தாவாவில், தேவதூதர்களின் உணவான மன்னா மட்டுமே தங்களிடம் இருப்பதாகவும் இறைச்சியை வேண்டியும் முணுமுணுத்தார்கள்.  தேவன் அவர்களுக்கு காடைகளைக் கொடுத்தார், அவர்களைத் தண்டிக்கவும் செய்தார்.  

10) நிராகரிக்கப்பட்ட அறிக்கை:
காதேசில், அவர்கள் யோசுவா மற்றும் காலேபின் விசுவாச அறிக்கையை விட்டுவிட்டு.  மற்ற பத்து பேரின் நம்பிக்கையற்ற அறிக்கையை, அதுவும் கற்பனையை நம்பினர் (எண்ணாகமம் 14:1-3)

தண்ணீர், உணவு, மரண பயம், எதிரிகளைக் கண்டு பயம் மற்றும் தங்கக் கன்றுக்குட்டியைத் தேர்ந்தெடுத்தது ஆகியவை இஸ்ரவேலின் பாவங்கள்.  அடிப்படையில், இது தேவன் மீது விசுவாசமின்மையைக் காட்டுகிறது, ஆனால் அவர் கிருபையும், அன்பும் மற்றும் இரக்கமும் உள்ள தேவன். 

நான் என் தேவனை விசுவாசிக்கிறேனா அல்லது பரீட்சித்து பார்க்கிறேனா?

Author: Rev. Dr. J .N. மனோகரன்