மேன்மையான காரியமா அல்லது விசித்திரமான காரியமா?

அநேக நூலகங்கள் தங்கள் வசமுள்ள எக்கச்சக்கமான புத்தகங்கள் தொலைந்துவிடாமல் இருப்பதற்கு டுவே தசம எண் வகைப்படுத்தும் முறையைப் பின்பற்றுகின்றன; இதன்படி, புத்தகப் பட்டியல்களிலும் புத்தக அட்டையில் அதன் விவரங்கள் காணப்படும் விளிம்பு முனைப்புகளிலும் எண்கள் வரிசையாகக் காணப்படுகின்றன.  சில கணினி, வரலாறு மற்றும் புவியியல், தத்துவம், மதம், கலை, இலக்கியம் என காணப்படும்.  சிலர் வாசிப்பு, கற்றல், சிந்தனை, பகுப்பாய்வு மற்றும் எழுதுதல் ஆகியவற்றில் தங்கள் நேரத்தை நூலகத்தில் செலவிட விரும்புவார்கள்.  ஒவ்வொரு நபருக்கும் அவர்களுக்கென்று விருப்பங்கள் அல்லது தெரிவுகள் உள்ளன.  ஆனாலும், தேவன் மனிதகுலத்திற்கு வேதாகமம் என்ற மாபெரும் புத்தகத்தை மட்டுமே கொடுத்திருக்கிறார். துரதிர்ஷ்டவசமாக, இஸ்ரவேலர்கள் அதை ஒரு அந்நிய காரியமாக கருதினர் (ஓசியா 8:12). நித்தியத்தின் கண்ணோட்டத்தில், நூலகத்தில் உள்ள அனைத்து புத்தகங்களும் அந்நியமானதே, அவையெல்லாம் அறிவைக் கொடுக்கும், ஆனால் ஒளி அல்லது நித்திய வாழ்வோ மற்றும் நித்திய நம்பிக்கைக்கு நேராகவோ அழைத்துச் செல்ல முடியாது.

அறிவியல்:
சிலர் அறிவியலைக் குறித்து வியந்து, அதனைப் பற்றி ஆராய்ந்து முடிந்தவரை தகவல்களைப் பெறுகிறார்கள்.  உதாரணமாக, அவர்கள் செவ்வாய் கிரகத்தைப் படித்து நிபுணர்களாகலாம்.  இருப்பினும், துரதிர்ஷ்டவசமாக, தேவன் எவ்வாறு உலகைப் படைத்தார் என்பதை பலர் உணரவில்லை, மேலும் எந்தவொரு விஷயத்தையும் ஒரு சதவீதத்திற்கும் குறைவாகப் புரிந்துகொள்ளவே அறிவியல் உதவுகிறது.

இலக்கியம்:
பொதுவாக, இலக்கியம் என்பது சமூகத்தின் கருத்து மற்றும் மக்களின் அபிலாஷைகள் அல்லது விருப்பங்களும் கலந்தது ஆகும்.  இலக்கியம் நித்திய நம்பிக்கையைத் தரத் தவறியதால் அவை மனச்சோர்வையும் ஏமாற்றத்தையும் தருகின்றன.

தத்துவம்:
வாழ்க்கையின் மர்மங்களைத் தேடி, தத்துவவாதிகள் எண்ணங்களின் பிரமைக்குள் தொலைந்து போகிறார்கள்.  பலர் நடை பிணம் போல் ஆகிவிடுகிறார்கள்.

சுய உதவி:
சுய உதவி பற்றிய புத்தகங்களின் முடிவில்லாத தயாரிப்புகளான;  பணக்காரர் ஆவது எப்படி?  வெற்றி பெறுவது எப்படி?  எப்படி செல்வாக்கு உள்ளவராவது?  நீண்ட ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வது எப்படி?  சில நேரங்களில், இந்த ஆசிரியர்கள் ஒருவருக்கொருவர் முரண்படுகிறார்கள்.  சுய உதவியை நாடுபவர்கள், பெரிய உதவியான கிருபையை இழக்கிறார்கள்; இது தேவனின் வரம்.  பணிவு இல்லாவிட்டால், கிருபையைப் பெற முடியாது.

 டிஜிட்டல் விளையாட்டுகள்:
சிலர் டிஜிட்டல் நூலகங்களுக்கு செல்வதே கணினி மூலம் விளையாடவே.  ஸ்மார்ட்போன்களின் வருகையால், மக்கள் தங்கள் தொலைபேசியில் விளையாட முடியும்.  சிறந்த கேம்களைப் பெற, டிஜிட்டல்  நூலகம் இருக்கும் பொது இடங்களுக்குச் செல்கிறார்கள்.  மெய்நிகர் வெற்றிகள் மற்றும் உணர்வு நல்ல காரணி மறைந்துவிடும் அல்லது இந்த விளையாட்டுகள் மக்களை அடிமையாக்கும்.

தேவன் பேசுகிறார்:
வரலாற்றில் பேசினது போல இன்றும் தேவன் வேதாகமம் மூலம் பேசுகிறார்.

 வேதாகமத்தின் மகத்தான சத்தியங்களை நான் கவனமாக கேட்கிறேனா?

Author: Rev. Dr. J .N. மனோகரன்