ஒரு தேசத்திற்கான அறிவுரை

தீர்க்கதரிசி அசரியா, ராஜா ஆசாவை அறிவுறுத்தினார். அதில், யூதா ஜனத்தின் பிரச்சனையை அவர் வெளிப்படுத்தினார்: அதாவது “நீண்ட காலமாக இஸ்ரவேல் உண்மையான தேவனும், போதிக்கும் ஆசாரியரும், சட்டமும் இல்லாமல் இருந்தது.” (2 நாளாகமம் 15:3) உண்மையான தேவனையும், அவர் சட்டத்தையும் ஏற்றுக்கொண்டு, அவர் ஊழியர்களிடமிருந்து சந்தோஷமாய் சுவிசேஷத்தைப் பெறும் தேசம் வளர்ச்சி பெற்று செழித்து விளங்கும்.

உண்மையான தேவன்:
தேவன் தம்மை ஜனங்களுக்கு வெளிப்படுத்தி, உடன்படிக்கை உறவையும் ஏற்படுத்தியிருந்த போதிலும், அந்த தேசம் உண்மையான தேவனில்லாமல் இருந்தது. ஆனாலும் அவர்கள் அண்டை தேசங்களுடன் தேவன்களைத் தேர்ந்தெடுத்ததுடன், தாங்களே தங்கள் தேவன்களையும் உருவாக்கினர்.

போதிக்கும் ஆசாரியர்:
ஆசாரியரும் லேவியரும் பலியிடுதல் மற்றும் பிற சடங்குகளை நிறைவேற்றுவதற்காக மட்டுமே அழைக்கப்படவில்லை. தாவீது ராஜா, இசைக்கலைஞர்கள் மற்றும் பாடகர்களை நியமித்தார் (1 நாளாகமம் 6:31-32). ஆனால், லேவிய ஆசான்களை நியமித்தது குறித்து எந்த தகவலும் காணப்படவில்லை. ஆசாரியரும் லேவியரும், இஸ்ரவேலின் எல்லா கோத்திரங்களுக்கும் தேவனுடைய வார்த்தையை போதிக்க வேண்டும் என்பதே அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட கட்டளையாக இருந்தது. போதித்தல் என்பது, தேசத்தின் ஆவிக்குரிய மற்றும் நெறிமுறையான வாழ்க்கையை காக்க அத்தியாவசியமானது (லேவியராகமம் 10:11; உபாகமம் 33:10; மல்கியா 2:7; 2 நாளாகமம் 17:7-9). இது போதுமான அளவில், முறையாகவும், இடையறாதும் செய்யப்படாதபோது, தேசத்தின் ஆவிக்குரிய வாழ்க்கையில் வீழ்ச்சி ஏற்பட்டது.

பிரமாணம்:
பிரமாணத்தின் அறிவின்மை காரணமாக அந்த தேசம் அழிக்கப்பட்டது (ஓசியா 4:6). அந்தச் மோசேயால் நியாயப்பிரமாணம் பதிவு செய்யப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டது (யாத்திராகமம் 20-23). அவர் அதை பொதுமக்கள் முன்னிலையில் வாசித்து, தேவனுடன் உடன்படிக்கை செய்து கொண்டார். பின்னாளில் யோசுவாவும் அதை வாசித்து, உடன்படிக்கையைப் புதுப்பித்தார் (யோசுவா 24:25). எஸ்றாவும் வேதாகமத்தை வாசித்து போதித்தார் (நெகேமியா 8:3-6). ஆனால் பெரும்பாலும் அந்தச் சட்டம் புறக்கணிக்கப்பட்டு, கவனிக்கப்படாமல், அக்கறையின்றி விடப்பட்டது. அவர்கள் தேவனுடைய நியாயப்பிரமாணத்தை ஓர் அந்நியமானதாகக் கருதினர் (ஓசியா 8:12).

போதிக்கும் திறன்:
மகா ஆணை என்பது சுவிசேஷத்தை உலகமெங்கும் கொண்டு செல்வதையே குறிக்கிறது. எல்லா மனிதர்களும் சுவிசேஷத்தை கேட்கும் வாய்ப்பைப் பெற வேண்டும். அதில், ஆண்டவர் தமது சீஷர்களுக்குக் கற்றுக் கொடுத்த அனைத்தையும் எல்லா தேசங்களுக்கும் போதிப்பதும் அடங்கும் (மத்தேயு 28:18-20). ஒரு மூப்பருக்கான தேவைகளில் ஒன்றாக, போதிக்கும் திறனும் குறிப்பிடப்பட்டுள்ளது (1 தீமோத்தேயு 3:2).

நான் உண்மையான தேவனையும், அவருடைய பிரமாணத்தையும், அவருடைய போதனைகளையும் ஏற்றுக்கொள்கிறேனா? 

Rev. Dr. J.N. Manokaran