ஆக்கபூர்வமான குறிப்பிட்ட ஜெபங்கள்

மற்றவர்களுக்காக எப்படி ஜெபிக்க வேண்டும் என்பது பலருக்குத் தெரியும்.   ஆனால் தம்மை துன்புறுத்துபவர்களுக்காகவும் பகைப்பவர்களுக்காகவும் ஜெபிக்கும்படி கர்த்தர் சீஷர்களுக்கு கற்றுக் கொடுத்தார் (மத்தேயு 5:44; லூக்கா 6:28). தேவன் தம்முடைய சீஷர்களுக்குக் குறைவாகப் பயன்படுத்திய சிலாக்கியங்களில் ஒன்று ஜெபம். ஜெபத்தின் ஒழுக்கம் ஆக்கப்பூர்வமானதாகவும், தனிநபர்கள், குடும்பங்கள், அமைப்புகள், கட்டமைப்புகள், சமூகங்கள் மற்றும் நாடுகளை மாற்றுவதற்கு குறிப்பிட்டதாகவும் இருக்கலாம்.  சிரத்தையுள்ள நண்பர், தனது வீட்டிற்கு வருகை தரும் நண்பருக்காக, பக்கத்து வீட்டு நண்பரிடம் கொஞ்சம் ரொட்டிகளைக் கேட்டு தொந்தரவு செய்து, பின்னர் அவருக்குத் தேவையானவற்றைப் பெற்றார், மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட ரொட்டிகள் மட்டுமல்ல, வெண்ணெய் மற்றும் ஜாம் என கூடவே கிடைத்தது (லூக்கா 11:5-13)

தகவல்:  
நல்ல பரிந்துரையாளர்கள் ஊடகங்கள் மற்றும் தனிப்பட்ட உறவுகள் உட்பட பல்வேறு ஆதாரங்களில் இருந்து தகவல்களை சேகரிக்கின்றனர்.  ஒரு இயற்கை பேரழிவு என்பது பொதுச் செய்தி, அதே சமயம் நோய்வாய்ப்பட்ட விசுவாசி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது தனிப்பட்ட தகவல்.    இந்த தகவலை ஜெபமாக மாற்றுவது ஒரு ஆவிக்குரிய திறமையாகும். 

நுண்ணறிவு:  
ஒரு விசுவாசி நுண்ணறிவுகளுடன் ஜெபிக்க பரிசுத்த ஆவியானவர் உதவுகிறார்  (ரோமர் 8:26-28). மனிதர்களாகிய நமது அறிவுத்திறன் அனைத்தும் பின்னணி தகவல்களையும் துல்லியமான எதிர்கால கணிப்புகளையும் வழங்குவதில்லை.  இருப்பினும், தெரியாதவர்களுக்காக ஜெபிக்க பரிசுத்த ஆவியானவர் இந்த அற்புதமான பாக்கியத்தைத் தருகிறார்.  

அதீத விசுவாசம் தேவை: 
குறிப்பிட்ட ஜெபங்கள் தைரியமான ஜெபங்களாகும், ஆம், தேவனின் பண்புகள், வார்த்தை, திட்டம் மற்றும் நோக்கம் ஆகியவற்றைப் புரிந்துகொள்வதில் அதீத விசுவாசம் தேவை.  சிலர் ஜெபிக்க பயப்படுகிறார்கள், அத்தகைய ஜெபங்களுக்கு தேவன் பதிலளிப்பாரா என்று சந்தேகிக்கிறார்கள். விசுவாசம் இல்லாமல் எவனும் தேவனுக்கு விருப்பமானவனாக இருக்கமுடியாது. தேவனிடத்தில் வருகிறவன் அவர் உண்மையாகவே இருக்கிறார் என நம்பிக்கை கொள்கிறான். அதோடு தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் கொடுப்பார் என்றும் நம்பிக்கை கொள்ளவேண்டும் (எபிரெயர் 11:6).

விஷயங்களை கவனமாக பரிசீலித்தல்:  
மிகச் சரியான ஜெபங்கள் என்பது யாருக்காக ஜெபம் செய்யப்படுகிறதோ அவர்களைப் பற்றிய கரிசனையோடு அனுதாபத்தோடு அந்த சீஷன் ஜெபிக்க வேண்டும்.  உதாரணமாக, ஒரு இளம் கல்லூரி மாணவன்  தேர்வெழுதுவதற்காக ஜெபம் செய்யும் போது, அந்த இளைஞனை அவனின் பயம், பதட்டம், பாடத்தைப் பற்றிய புரிதல், நினைவாற்றல், மனதில் பதிவது, சாதகமான சூழல், அன்றிரவு நல்ல உறக்கம், நல்ல ஆரோக்கியம், மற்றும் ஹால் டிக்கெட் உள்ளிட்ட ஆதாரங்கள், இடம், செல்லும் வழியில் போக்குவரத்து நெரிசல் இல்லாமல், தேர்வு கூடத்தில் அமைதியான சூழல் நிலவ என தேர்வு தொடர்பான அனைத்து காரியங்களுக்காகவும் ஜெபிக்க வேண்டும். 

எதிர்பார்ப்பு:  
ஆக்கபூர்வமான குறிப்பிட்ட ஜெபங்கள் பதிலை எதிர்பார்க்கின்றன. ஜெபங்கள் அர்த்தமுள்ளதாகவும் ஆக்கப்பூர்வமாகவும் இருந்தால், சிருஷ்டிக் கர்த்தர் படைப்பாற்றலில் அற்புதமானவராக இருப்பார்.   அவர் மிகவும் எதிர்பாராத விதமாக பதிலளிப்பார்.  அவர் மனித எண்ணங்கள், கற்பனைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை மிஞ்சுவார் (எபேசியர் 3:20).

எனக்கு ஆக்கபூர்வமான மற்றும் தெளிவான ஜெப ஒழுங்கு என்னிடம் உள்ளதா?
 

Rev. Dr. J.N. Manokaran