சிட்சையை வெறுக்காதே

அதிக சுமைகளுடன் வேகமாக ஓடுதல், மரங்களில் ஏறுதல், சுவர் தாண்டுதல், நீந்துதல், புதர்கள் வழியாக ஊர்ந்து செல்வது, அசையாமல் கிடப்பது... என இவைப் போன்றவை; இராணுவத்தின் சிறப்பு உயரடுக்கு படைக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட இளைஞர்களின் தினசரி பயிற்சி நடைமுறைகள் இவை.  இது கடினமானது, ஆபத்தானது மற்றும் அபாயகரமானது.  இருப்பினும், கடுமையான பயிற்சி அவசியம்.  இவற்றை செய்ய திறமையுள்ள வீரர்கள் பயிற்சியை ஒழுக்கமாக கருதுகின்றனர், தண்டனையாக அல்ல.  யோபு மிகுந்த துன்பங்களைச் சந்தித்தபோது, ​​அவனது மூன்று நண்பர்களான எலிப்பாஸ், பில்தாத் மற்றும் சோப்பார் ஆகியோர் அதாவது யோபுக்கு நேர்ந்தது என்பது தேவ தண்டனை அல்லது நியாயத்தீர்ப்பு அல்லது அவன் செயலுக்கு கிடைத்த எதிர்வினை என மிகவும் உறுதியாக இருந்தனர். இருப்பினும், எலிகூ உள்ளே நுழைந்து, இது தேவன் யோபுவை நெறிமுறைப்படுத்த அல்லது ஒழுங்கிற்கு கொண்டு வர சிட்சிக்கிறார் என்று கூறுகிறான். பின்பதாக யோபுவும் இதை ஒப்புக் கொண்டு, ஆம், தேவன் என்னைச் சோதித்த பின் பொன்னாக விளங்குவேன் என உறுதியாக நம்புகிறான் (யோபு 23:10). 

"என் மகனே, கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே, அவரால் கடிந்துகொள்ளப்படும்போது சோர்ந்துபோகாதே. கர்த்தர் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனை அவர் சிட்சித்து, தாம் சேர்த்துக்கொள்ளுகிற எந்த மகனையும் தண்டிக்கிறார்" (எபிரெயர் 12:5-6). ஆம், ஒரு விசுவாசி அனுபவிக்கும் துன்பம் (நோய், இழப்பு, துக்கம்...) கர்த்தர் தன் பிள்ளைகளுக்கு அளிக்கின்ற அன்பான சிட்சை.

1) தண்டனை:
சிட்சை என்பது ஒரு நபரை அவரது திட்டம் மற்றும் நோக்கத்திற்கு ஏற்ப வடிவமைக்க எஜமானால் வடிவமைக்கப்பட்ட ஒரு செயல்முறையாகும்.  அதைத் தண்டனையாகக் கருதுவது தேவனை தவறாகப் புரிந்துகொள்வதாகும்.  தேவனுடைய சிட்சையை இலகுவாகக் கருதுவது அல்லது இகழ்வது அல்லது சோர்வடைவது முட்டாள்தனம்.

2) வளர்ச்சி:
சிப்பாய் முதல் உயரடுக்கு படையின் கேப்டனாக பதவி உயர்வு பெற விரும்புவோர், ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும்.  சிறப்பு பயிற்சியின் கடினமான செயல்முறை இல்லாமல் முன்னேற்றம் அல்லது வளர்ச்சி அல்லது பதவி உயர்வு சாத்தியமில்லை.

3) வல்லமை:
இத்தகைய துன்பங்களை தேவனின் போதுமான கிருபையால் சமாளிக்க முடியும் என்பதையும் மற்றும் நம்முடைய பலவீனத்தில் அவருடைய வல்லமை வெளிப்படும் என்பதையும் தேவன் பவுலுக்கு உணர்த்தினார் அல்லவா (2 கொரிந்தியர் 12:9).

4) உற்பத்தி:
ஒரு தோட்டக்காரன் கனி கொடுப்பதற்கு ஏதுவாக கொடியை சுத்தம் பண்ணுகிறான் (யோவான் 15:2). தேவன் தம்முடைய பிள்ளைகள் அபரிமிதமான நீடித்த கனிகளை பிறப்பிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்.  அதில் ஆவியின் கனி மற்றும் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரம் அதாவது நன்றி செலுத்துதல் ஆகியவை அடங்கும் (கலாத்தியர் 5:22-23; எபிரெயர் 13:15).

5) சான்று:
"என் மகனே, நீ கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே, அவர் கடிந்துகொள்ளும்போது சோர்ந்துபோகாதே. தகப்பன் தான் நேசிக்கிற புத்திரனைச் சிட்சிக்கிறதுபோல, கர்த்தரும் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனைச் சிட்சிக்கிறார்" (நீதிமொழிகள் 3:11-12). ஆம், தேவன் நேசிப்பவர்களை அவர் சிட்சிக்கிறார், அவரின் அன்பே நமக்கு சான்று.

துன்பத்தைப் பற்றிய தெய்வீகக் கண்ணோட்டம் என்னிடம் உள்ளதா?
Author: Rev. Dr. J. N. Manokara