தாவீது ராஜாவைப் பொறுத்தவரை, தேவனுடைய பரிசுத்த ஜனங்கள் சிறந்தவர்கள் என்று சொல்லப்பட்டிருக்கின்றது (சங்கீதம் 16:3). பரிசுத்தவான்கள் இவ்வுலகில் இருக்கின்ற வரை, அவர்கள் முழுமையற்றவர்களாகவும், குறைவுகளுடனும், சில சமயம் முதிர்ச்சியற்றவர்களாகவும் இருக்கக்கூடும். இருந்தாலும், அவர்கள் சிறந்தவர்களாகவே இருக்கிறார்கள். பவுல் கொரிந்தியசபையினருக்கு எழுதுகிறார். அவர்களிடையே ஏதாவது பாவங்கள் இருக்கக்கூடும் என்பதைக் குறித்து அவர் கவலைப்படுகிறார் (2 கொரிந்தியர் 12:20). அந்த பாவங்கள் உடன்படிக்கையை பாதிக்கலாம், பிளவுகளை உண்டாக்கலாம், மற்றும் தரிசனத்தைக் கெடுக்கக்கூடும்.
சண்டையிடுதல்:
சண்டையிடுதல் வன்முறையிலும் முடிவடையக்கூடும். பவுல், ஒருவர் மற்றவருடன் சண்டையிடவும், ஒருவரை ஒருவர் விழுங்கவும் கூடாது என்று எச்சரிக்கிறார். இல்லையெனில் இருவரும் அழிந்து விடக்கூடும் (கலாத்தியர் 5:15). சில நேரங்களில் இது சிறிய காரணங்களுக்காக தொடங்கலாம். ஆனால் ஆணவம் தலைதூக்கியவுடன், அது அழிவுக்கே வழிவகுக்கும் ஆபத்தான திசையில் செல்லக்கூடும்.
பொறாமை:
அருவருப்பான ஒப்பீடுகளும் போட்டிகளும் இருந்தால், அங்கே பொறாமை தோன்றுகிறது. இளைய தாவீதை ராஜா சவுல் தன்னோடு ஒப்பிட்டு பார்த்தபோது, மக்களின் புகழ் பாடலும், யுத்தத்தில் தாவீது பெற்ற வெற்றியும் சவுலுக்கு பொறாமையை ஏற்படுத்தியது (1 சாமுவேல் 18:7). மக்களின் தன்னிச்சையான ஆனந்தம், பாடலும், நாட்டியமும் சவுலின் ஆணவத்தை புண்படுத்தின. இதனாலே அவர் வாழ்க்கை முழுவதும் பொறாமையில் பலியாகி, தாவீதைக் கொல்ல விரும்பினார். இது, ஒரு இராணுவம் ஒரே ஓர் பூச்சியைத் தேடுவது போன்று இருந்தது என்று விவரிக்கப்படுகிறது (1 சாமுவேல் 26:20).
கோபம்:
மற்றவர்களையும் சூழ்நிலையையும் கட்டுப்படுத்த முடியாதென்று எண்ணும் போது, சிலர் கோபமடைகிறார்கள். ஐக்கியத்திலே சேவையாற்ற வேண்டிய இடத்தில், அவர்கள் ஆட்சி செய்யவும் கட்டளையிடவும் முயல்கிறார்கள். ஆனால் பிறர் அவர்களின் வார்த்தைகளை அல்லது ஆலோசனைகளைக்கேட்கவில்லை என்றால், அவர்கள் கோபமடைகிறார்கள்.
விரோதம்:
ஜாதி, பண்பாடு, மொழி, நாடுகள், சமூக நிலைகள் மற்றும் சாதிகள் ஆகியவற்றிற்கிடையிலான விரோதம் உலகின் எல்லா பகுதிகளிலும் காணப்படுகிறது. இருப்பினும், தேவன் தமது ஜனங்களை ஒரே சரீரம், ஒரே குடும்பமாக இருக்க அழைத்திருக்கிறார். அந்தியோகிய திருச்சபையின் தலைமை குழு இதற்கொரு சிறந்த எடுத்துக்காட்டு. அங்கே இருந்த ஐந்து தலைவர்கள் ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பா என மூன்று பெரும் கண்டங்களில் இருந்தவர்கள் (அப்போஸ்தலர் 13:1).
பழிவார்த்தை:
இது பொய்யான தகவல் அல்லது அவதூறு பரப்புவது என்பது குணநலன் படுகொலை ஆகும். இது ஒருவரின் சிறப்பை அழிக்கும் செயலாகும், இது கொலைக்குச் சமமானது.
தீயபேச்சு:
பொய்ச் செய்திகளைப் பரப்புகிறவன் நெருங்கிய நண்பர்களுக்குள் துன்பத்தை ஏற்படுத்துவான் (நீதிமொழிகள் 16:28).
மோசமான பெருமிதம்:
இது மனத்தாழ்மைக்கு எதிர்மறையானது. தேவன் நீதியாக நடத்தல், இரக்கம் காட்டல், மற்றும் பணிவுடன் நடத்தல் (மீகா 6:8) என மூன்று விஷயங்களை எதிர்பார்க்கிறார்.
ஒழுக்கமின்மை:
தனிநபர்களின் ஒழுக்கமின்மை சபையில் குழப்பத்துக்கும் அமைதியின்மைக்கும் வழிவகுக்கிறது.
தேவனின் பரிசுத்தவான்களுடன் எனக்கு இருக்கும் ஐக்கியம் சிறப்பானதா?
Rev. Dr. J.N. Manokaran