இயேசு நமக்குக் கற்பித்தபடி மன்னிக்கின்றோமா

ஜெசிகா பிரவீன் அவர்கள், மர்மமான சூழ்நிலைகளில் உயிரிழந்த ப்ரவீன் பாகடலாவின் மனைவியாவார். இந்த சம்பவம் 2025 மார்ச் 25ஆம் தேதி ஆந்திரப்பிரதேசத்தில் நடந்தது. கிறிஸ்தவ சமூகத்தினர் இதை ஒரு சூழ்ச்சி மற்றும் கொலை என நம்புகிறார்கள். அவரது இறுதிச் சடங்கில், ஜெசிகா அவர்கள் சகிப்புத்தன்மையையும் மன்னிப்பையும் வெளிப்படுத்தும் வலிமையான செய்தியொன்றை பகிர்ந்தார்: "இயேசு மன்னித்ததைப் போல, நாங்களும் அனைவரையும் மன்னிக்கிறோம்”. இந்த காணொளி சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டது. அதை பார்த்தவர்கள், அவரது துணிச்சல், நித்திய நம்பிக்கை மற்றும் அவர் கூறிய சத்தியத்தால் அதிர்ச்சியடைந்தனர்.

அவமதிக்கப்படல் மற்றும் கொல்லப்படல்:
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, தம்மைப் பின்பற்றுபவர்கள் ஒருநாள் எல்லாராலும் வெறுக்கப்படுவார்கள், மேலும் கொல்லப்படுவார்கள் என்றும் எச்சரித்தார் (மத்தேயு 24:9). கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தம் சீஷர்களிடம், தான் எந்த காரணமும் இல்லாமல் வெறுக்கப்படுவதைப் பகிர்ந்து கொண்டார் (யோவான் 15:25). கிறிஸ்தவர்களுக்கு மரணமடைதல் (மார்த்திரம்) ஒரு விசித்திரமான விஷயமல்ல; அது உலகம் முழுவதும் பெரிதளவில் அதிகரித்துவருகிறது.

மன்னித்தல்:
ப்ரவீன் ஒரு எளிமையான நபராக இருந்தாலும், அறிவும் ஞானமும் கொண்டவராக இருந்தார். அவர் சுவிசேஷ சத்தியத்தை தெளிவாக அறிவிக்கக் கூடியவராக இருந்தார். சுவிசேஷம், வேதாகமம் மற்றும் சத்தியம் பொய்கள் மற்றும் தவறான தகவல்கள் மூலம் தாக்கப்படும்போது, அவர் அதை தைரியமாக பாதுகாத்தார். பவுல் தன் தலைமுறையில் சுவிசேஷத்தை எப்படி பாதுகாத்தாரோ, அதுபோல் ப்ரவீனும் தன் தலைமுறையில் பாதுகாத்தார் (பிலிப்பியர் 1:16). அவருடைய நம்பிக்கைக்குரிய சாட்சியம் மற்றும் திடமான பாதுகாப்பு பலருக்குப் பிடிக்கவில்லை. அவருடைய அறிவிப்பிற்கு யாரும் எதிர்த்துப் பேச முடியவில்லை. அவரைக் கண்டு பயந்தனர், பொறாமை கொண்டனர், வெறுத்தனர்.

ஆலோசனையளித்தல்:  
அவருடைய பகுதிக்குள் இருந்த கிறிஸ்தவர்கள் குறிவைக்கப்பட்டு தாக்குதல்களுக்கு உள்ளானார்கள். இந்நிலையில், ப்ரவீன் அவர்கள் அவர்களிடம் "துயரங்களை பொறுமையுடன் சகிக்கவும், பயந்து உடைந்துபோகாமல் இருக்கவும்"  அறிவுறுத்தினார். அதே சமயம், அவர் அவர்களுக்குத் தங்களுக்கான அரசியலமைப்பு உரிமைகளைப் பற்றி விளக்கினார். இந்திய அரசியலமைப்பின் கீழ் மதசுதந்திரம் மற்றும் பாதுகாப்பு உரிமைகள் உங்களுக்கு உண்டு என்பதைக் கூறி, அவர்கள் உரிமைகளை நிலைநாட்ட உதவினார். மேலும், தொடர்ந்து நடைபெறும் தாக்குதல்களையும் தொல்லைகளையும் நிறுத்துவதற்காக சட்ட நடவடிக்கைகள் மற்றும் புகார்கள் மூலம் நடவடிக்கை எடுத்தார்.

 இரங்குதல்: 
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தம்முடைய சீஷர்களுக்கு, விரோதிகளை நேசியுங்கள், உங்களைத் துன்புறுத்துவோருக்காக ஜெபியுங்கள் என்றும் கற்பித்தார் (மத்தேயு 5:44). இயேசு இந்த போதனையை தாம் வாழ்வில் நடைமுறைப்படுத்தியும் காண்பித்தார். தம்மை வேதனைப்படுத்தி சிலுவையில் அறைந்தவர்களுக்காக, "தந்தையே, இவர்களை மன்னியுங்கள்" என்று கெஞ்சி ஜெபித்தார் (லூக்கா 23:34). ஆரம்பகால சீஷர்களில் ஒருவராகிய ஸ்தேவானும், கல்லால் அடித்து கொல்லப்பட்டபோது, தன்னை கொன்றவர்களை மன்னித்தார் (அப்போ. 7:60). ஜெசிகா, தம்மை வழிநடத்தும் ஆண்டவரையும், தம்முடைய கணவர் மற்றும் இரு மகன்களை எரித்தவர்களை மன்னித்த கிளாடிஸ் ஸ்டெயின்ஸ் போன்ற பரிசுத்தரையும் பின்பற்றி, மன்னிப்பின் வழியையே தேர்ந்தெடுத்தார்.

துன்புறுத்தல் மற்றும் இழப்புக்கு மத்தியில் சாட்சியாய் நிற்க எனக்கு தைரியம் இருக்கிறதா?  
 

Rev. Dr. J.N. Manokaran