அதிகமான தண்டனை பேராபத்து

ஆந்திரப் பிரதேச ரெசிடென்ஷியல் (தங்கியிருந்து படிப்பது) ஜூனியர் கல்லூரியில் உடல் ரீதியான தண்டனைக்குப் பிறகு 50 சிறுமிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  தோப்புக்கரணம் போட வேண்டும் என்ற தண்டனை அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது.  அதாவது நிமிர்ந்து நின்றபடி இடது கையால் வலது காதையும், வலது கையால் இடது காதையும் பிடித்தபடி பாதங்களை முழுமையாக நிலத்தில் பதித்தபடி உட்காந்து எழுவது தோப்புக்கரணம் ஆகும். இது அவர்களின் படிப்பில் ஒழுங்கற்றதாகக் கருதப்படுபவர்களுக்கு அளிக்கும் தண்டனையாகும்.  ஒரு நாளைக்கு சுமார் 100 மாணவர்கள் மூன்று நாட்களுக்குள் இந்த தண்டனைக்கு உட்படுத்தப்பட்டனர், ஒவ்வொரு மாணவரும் ஆயிரம் முறை தோப்புக்கரணம் போட உத்தரவிட்டனர் (டெக்கேன் குரோனிக்கிள், செப்டம்பர் 17, 2024). வேதாகமத்தில் அனுமதிக்கப்பட்ட (உபாகமம்) கசையடிகள் அதிகபட்சம் 40;  ஒரு மனிதன் அதிகபட்சமாக 40 கசையடிகள் தண்டனையாகப் பெறலாம் என்பது யூத சட்டம். ஆக  சுமார் 40 அல்லது அதற்கு மேற்பட்ட எண்ணிக்கை என்றால் அவர்களின் உயிர் முக்கியமற்றது என்று எண்ணுவதாகக் கருதப்பட்டது (உபாகமம் 25:1-3). நீதிபதி முன்னிலையில் தண்டனை வழங்கப்பட வேண்டும், அதன் மூலம் அவர் தண்டனை அதிகமாக இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்.  அப்படியானால் ஒரு நபரின் கண்ணியத்தை அவமானப்படுத்தாத அல்லது மரியாதையை பறித்துக் கொள்ளாத தண்டனையை தேவன் வடிவமைத்தார் என்று நாம் புரிந்துக் கொள்ள வேண்டும். 

ஒழுக்கத்தின் தடி:  
ஒருவன் உண்மையாகவே தன் பிள்ளைகளை நேசித்தால், அவர்கள் தவறு செய்யும் போது அவற்றைத் திருத்தவேண்டும். நீ உன் குமாரனை நேசித்தால் அவனுக்குச் சரியான பாதையைப் போதிக்க வேண்டும் என்று வேதாகமம் போதிக்கிறது (நீதிமொழிகள் 13:24). தண்டனை என்பது ஒழுக்கத்தின் ஒரு பகுதி.   அன்புதான் ஒழுக்கத்திற்கு அடிப்படையே தவிர கோபமோ பழிவாங்கலோ அல்ல.  தடி  மேய்ப்பனால் பயன்படுத்தப்படுகிறது என்பதைக் குறிக்கிறது.   பெற்றோர்களும் ஆசிரியர்களும் குழந்தைகளை மேய்ப்பவர்கள் மற்றும் அவர்களை தண்டிக்கவும், கண்டிக்கவும், சரியான திசையில் வழிநடத்தவும் தடியைப் பயன்படுத்துகிறார்கள். 

அவமானம்: 
தண்டனை என்பது நபர் தனது பாவத்தைப் புரிந்து கொள்ளவும், மனந்திரும்பவும், மீட்கவும் உதவும் நோக்கம் கொண்டது.  அதிகப்படியான தண்டனை ஒரு நபரை அவமானப்படுத்துகிறது மற்றும் அவரது ஆத்துமாவை கொன்று விடுகிறது மற்றும் வாழ வேண்டும் என்ற விருப்பத்தையே அழித்து விடுகிறது. 

மானம்:  
ஒவ்வொரு மனிதனும் தேவனின் சாயலில் படைக்கப்பட்டவர்கள். தேவன் கொடுத்த கண்ணியத்தை யாரும் பறிக்கக் கூடாது. 40 அடிக்கு மேல் கொடுக்கும் தண்டனை என்பது ஒரு மனிதனை மிருகமாக்கி அவனை மிருகமாக நடத்துவது போலாகும். 

பொல்லாதவர் என்று முத்திரை:  
அதிகப்படியான தண்டனை கொடுக்கப்பட்டால், அந்த நபர் அனைவராலும் கேலி செய்யப்படுவார்.   அத்தகைய நபர் தீயவராகவும், பொல்லாதவராகவும், சமூகத்திலிருந்து தனிமைப்படுத்தப்பட்டவராகவும், சில சமயங்களில் குடும்பத்திலிருந்தும் கூட விலக்கிக் கருதப்படுவார்.

இதயம் தான் பிரச்சனை:  
ஒரு ஆசிரியர் குழந்தைகளை நேசிக்க வேண்டும், அது குழந்தைகளுக்கு தேவன் கொடுத்த திறனை அளவிட அல்லது பெருக்கிட உதவுகிறது. எப்போது  ஒரு ஆசிரியரால் குழந்தைகளை நேசிக்க முடியவில்லையோ, அல்லது ஒரு ஆசிரியராக வேண்டும் என்ற அழைப்பை நேசிக்க முடியவில்லையோ, அல்லது கற்பிப்பதை நேசிக்க முடியவில்லையோ;  அப்போது வெறுப்பும், கசப்பும், இரக்கமின்மையும் இருதயத்தில் கலந்து விடுகிறது. 

நான் என் வேலையை அன்போடும் சிரத்தையோடும் முழுமனதோடும் செய்கிறேனா? 

Rev. Dr. J.N. Manokaran