சோம்பலின் ஐந்து விளைவுகள்

நீதிமொழிகள் 24: 30ல் வாசிக்கிறோம், சோம்பேறியான ஒருவனுக்குச் சொந்தமாக வயல் இருந்தது; அவனின் சோம்பேறித்தனம் அவனது வயலுக்கும், தனிப்பட்ட வாழ்வுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியது (நீதிமொழிகள் 24:30-32). ஒருவேளை நாமும் சரீர ரீதியாகவும், மன ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும், ஆவிக்குரிய ரீதியாகவும் சோம்பேறிகளாக இருக்கக்கூடும்.

முட்கள்:
ஆதாம் மற்றும் ஏவாளின் வீழ்ச்சியின் காரணமாக மனிதர்களுக்கு ஏற்பட்ட சாபத்தின் விளைவாக முள்ளும் குறுக்கும் தோன்றின (ஆதியாகமம் 3:18). ஒருவன் சீஷனாக இருப்பின் அவன் ஆயத்தமாகவும் விழிப்புடனும் இல்லாமல் இருந்தால், அவனுடைய வாழ்க்கையில் முள்ளும் குறுக்கும் புகுந்துவிடும். முள்ளுகள் என்பவை வாழ்க்கையின் கவலைகளும் செல்வத்தின் வஞ்சகமும் ஆகும் (மத்தேயு 13:22). எந்த ஒரு வேலையையும் செய்யாமல் மற்றும் தேவனுடைய சித்தத்தையும் செய்யாமல்  கவலைப்பட்டுக் கொண்டிருப்பது எந்த பலனையும் தராது. 

களைகள்:
இரவில் எதிரி, கோதுமையின் நடுவே களைகளை விதைக்கிறான் (மத்தேயு 13:24-30). சில களைகள் தானாகவே வளரக்கூடும். இந்த களைகள், பயிர் வளர வளர அவசியமான சத்துக்கள் மற்றும் நீரினை மண்ணிலிருந்து உறிஞ்சி, கோதுமையை வாடச் செய்கின்றன. கவனக்குறைவான விவசாயிகள், அதிகமாக வளர்ந்த கொடிகளைப் பார்த்து, உண்மையான தானியத் தாவரங்களை கவனிக்க முடியாமல் போவார்கள். இதன் விளைவாக, விளைச்சல் கடுமையாக குறையலாம் அல்லது முற்றிலுமாக இழக்கப்படும்.

உடைந்த சுவர்கள்: 
சிதைந்த சுவர்கள் என்பது, அலைந்து திரியும் மிருகங்கள் உள்ளே சென்று பயிர்களை விழுங்கக்கூடிய நிலையை காட்டுகின்றன. திருடர்கள் அந்தச் சுவர்களின் வழியாக நுழைந்து அறுவடையை கொள்ளையடிக்க முடியும். உடைந்த சுவர்கள் தேவையற்ற நுழைவோரை அழைக்கும் கதவுகளாகி விடுகின்றன. நெகேமியா, சுவரில்லாத எருசலேம் நகரத்தை அவமானகரமாகவும் பாதுகாப்பில்லாததெனவும் கருதினார் (நெகேமியா 1:3).

வறுமை: 
அலட்சியமான உரிமையாளர் மீது வஞ்சிக்கும் திருடனைப் போல ஏழ்மை வந்து சேரும். ஏழ்மை என்பது நிலம் இல்லாததாலோ, வாய்ப்புகள் இல்லாததாலோ, வளங்கள் அல்லது திறமைகள் இல்லாததாலோ அல்ல; அது சோம்பேறித்தனத்தினால் மட்டுமே வருகிறது. ஒரு சோம்பேறி, "வழியில் சிங்கம் இருக்கிறது" என்று சாக்குபோக்குகள் கூறி தன்னை புத்திசாலி என எண்ணுகிறான் (நீதிமொழிகள் 22:13; 26:13-16). வாய்ப்புகள், சொத்துகள், திறன்கள், தேவனுடைய வரங்கள் அல்லது வேலைக்கான திறமைகள் இல்லாததே ஏழ்மையின் காரணம் அல்ல. அவர்கள் கனவுகளைத் தேடி ஓடுகிறார்கள், வார்த்தைகளில் மட்டுமே இயங்குகிறார்கள்; அதனால் ஏழ்மையிலே மூழ்குகிறார்கள் (நீதிமொழிகள் 28:19; 14:23).

பற்றாக்குறை: 
“ஒரு சோம்பேறி விதைகளை விதைக்கவும் சோம்பேறித்தனமாயிருக்கிறான். அதனால், அறுவடைக் காலத்தில் உணவை எதிர்ப்பார்த்தாலும் அவன் எதையும் பெறுவதில்லை” (நீதிமொழிகள் 20:4). இன்றைய உலகத்தில் நுகர்வோரை கவரும் பொருட்கள் அதிகமாக இருக்கின்றன; ஆனால் உண்மையான உணவு, அதாவது தேவனுடைய வார்த்தை இல்லாமலேயே இருக்கிறது. தேவனுடைய வார்த்தைக்காக ஒரு பஞ்சம் நிலவுகிறது (ஆமோஸ் 8:11).

நான் சோம்பேறியா அல்லது கர்த்தரிடத்தில் நல் சிரத்தையுள்ளவனா, ஆர்வமுள்ளவனா? 
 

Rev. Dr. J.N. Manokaran