தேவனுடைய சர்வாயுதவர்க்கம்

ஒரு போலீஸ் அதிகாரிக்கு அவசர அழைப்பு வந்தது. அப்போது தான் வீட்டிற்குள் நுழைந்தார்; அழைப்பு வந்ததால் வேகமாக சென்று வாகனத்தை எடுத்துக் கொண்டு சில சமூக விரோதிகள் அப்பாவி மக்களைச் சுட்டுக் கொண்டிருந்த இடத்திற்குச் சென்றார்.  போலீஸ் வாகனத்தை பார்த்த மர்மநபர்கள், அவர்கள் மீது துப்பாக்கியைத் திருப்பினர்.  துரதிர்ஷ்டவசமாக, அந்த அதிகாரி அவசரமாக வீட்டிலிருந்து கிளம்பியதால் தனது இயந்திர துப்பாக்கியை (AK47) வீட்டிலேயே விட்டிருந்தார். துப்பாக்கிச் சூட்டுக்கு ஆளான அவர் முழு போலீஸ் சீருடையில் அணிந்தவராய் மரித்துப் போனார்.  "நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்து நிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள்" (எபேசியர் 6:11) என பவுல் அறிவுறுத்துகிறார்.  

இரட்சணியமென்னும் தலைச்சீரா:
ஒருவன் மீண்டும் பிறக்கும்போதுதான், இரட்சிப்பின் தலைக்கவசத்தைப் பெற முடியும்.  இந்த தலைச்சீரா கண்ணியம், நம்பிக்கை மற்றும் தைரியத்தை வழங்குகிறது.

நீதியென்னும் மார்க்கவசம்:
இதயம் உட்பட சரீரத்தின் முக்கிய உள் பாகங்களை உள்ளடக்கிய மார்பைப் பாதுகாக்க, ராணுவ வீரர்கள் குண்டு துளைக்காத அல்லது குண்டு ஊடுருவ முடியாத மார்க்கவசங்களை அணிவதுண்டு.  கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மரணம், அடக்கம், உயிர்த்தெழுதல் மற்றும் பரமேறுதல் ஆகியவற்றின் மூலம் விசுவாசிகள் நீதிமான்களாக அழைக்கப்படுகிறார்கள்.  பரிசுத்தவான்கள் தேவ வார்த்தை மற்றும் தேவ ஆவியால் வழிநடத்தப்படும் நீதியான வாழ்க்கையையும் நடத்துகிறார்கள்.

விசுவாசம் என்னும் கேடகம்:
எதிரியின் தொடர்ச்சியான தாக்குதல்களை எதிர்கொள்ளும் போது ஒரு வீரன் திறமையாக கேடயத்தை நிலைநிறுத்துகிறார். விசுவாச கேடகம் சாத்தானின் அக்கினி ஈட்டிகளை நிறுத்துவது மட்டுமல்லாமல், அவற்றை அணைக்கவும் செய்வதாக பவுல் எழுதுகிறார்.

 சத்தியம் என்னும் கச்சை:
 வீரர்களுக்கு கயிற்றை இறுக்கமாகப் பிடித்துக் கொள்ள கச்சை பயனுள்ளதாக இருந்தது மற்றும் வெடிமருந்துகள், உணவு, தண்ணீர் மற்றும் போருக்குத் தேவையான பிற பொருட்களை எடுத்துச் செல்ல வசதி இருந்தது.  வார்த்தையே சத்தியம், கர்த்தராகிய இயேசுவே சத்தியம், சபையே சத்தியத்தின் தூண்.

 பாதரட்சை:
 முட்கள், முட்செடிகள், புதர்கள், பாறைகள் மீது முத்திரை பதித்து வேகமாக அணிவகுத்துச் செல்லும் ஒரு போர் வீரனுக்கு காலணிகள் இன்றியமையாததாகிறது.  சமாதானத்தின் சுவிசேஷத்திற்குரிய ஆயத்தம் என்று பவுல் விவரிக்கிறார்.

ஆவியின் பட்டயம்:
இரட்டை முனைகள் கொண்ட வாள் தேவனுடைய வார்த்தை (எபிரேயர் 4:12). மேற்கூறிய ஐந்து கவசங்களும் ஒரு போர் வீரனை காக்கும் தற்காப்பு ஆயுதங்களாகக் கருதப்பட்டாலும், எதிரியைத் தாக்கும் தாக்குதல் ஆயுதம் வாள்.  உண்மையில், செயலூக்கமுள்ள  தாக்கமே சிறந்த பாதுகாப்பு.

 ஜெபமும் பாதுகாப்பும்:
 எதற்காகவும் எல்லா சூழ்நிலையிலும் தேவனை நோக்கி வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும் சார்ந்திருப்பதும் ஜெபிப்பதும் மிக அவசியம்.  எப்போதும் விழிப்புடன் இருத்தல், இறுதிவரை சிரத்தையோடு செயல்படுதல் ஆகியவை இந்த ஆவிக்குரியப் போருக்கு இன்றியமையாத மனநிலையாகும்.

 நான் சுறுசுறுப்பாகவும், எச்சரிக்கையாகவும், சர்வாயுதவர்க்கத்தை தரித்த நபராகவும் இருக்கிறேனா?

Author: Rev. Dr. J .N. மனோகரன்