என் நடைகளை வழிநடத்தும்

இன்றைய இளைஞர்களுக்கு பொதுவாக வழங்கப்படும் அறிவுரை; “நீ மனதில் தோன்றும் எதையும் செய்யலாம்” என்பதாகவே இருக்கிறது. ஆனால், சங்கீதக்காரர், தனது அடிகள் தேவனுடைய வசனத்தின்படி நேர்வழியில் நடத்தப்பட வேண்டும் என்று வேண்டுகிறார் (சங்கீதம் 119:132–135).

உணர்வுகள்:
இப்போது பெரும்பாலான இளைஞர்கள் புத்தியால் அல்ல, உணர்வுகளால் நடத்தப்படுகிறார்கள். விமர்சன மனப்பாங்கிற்கு பதிலாக, உணர்ச்சிகள் மற்றும் நெகிழ்வுகள் அதிகம் உள்ளது. இதன் விளைவாக, பல நேரங்களில் தவறான முடிவுகள் எடுக்கப்படுகின்றன; சில சமயங்களில் ஒழுக்கக்கேடான முடிவுகளும் ஏற்படுகின்றன.

நண்பர்கள்:  
தனது நண்பர்களை ஆலோசகராக வைத்த ரெகொபெயாமைப் போல (1 இராஜாக்கள் 12:8), பலரும் இன்று தங்கள் நண்பர்களையே ஆலோசகர்களாக வைத்திருக்கின்றனர். ரெகொபெயாம் இஸ்ரவேல் தேசத்தை இரு ராஜ்யங்களாகப் பிரித்ததைப்போல், இவர்கள் ஆலோசனைகளும் மதியற்றவை, அறிவற்ற யோசனைகள். யெரொபெயாம் எடுத்த முடிவுகள் போலவே, இவை ஞானமான முடிவுகள் அல்ல; ஆனால் மூடத்தனமான மற்றும் வழுக்கும் படிகளாக இருக்கின்றன.

 விதி:  
பல மதங்கள் விதியை நம்புதலை (fatalism) போதிக்கின்றன. நிகழும் எல்லா நிகழ்வுகளும், ஒரு நபரின் பாவங்களின் அல்லது நற்கிரியைகளின் பலனாக முன்பே நிர்ணயிக்கப்பட்டவை என்றும், அதனால் அவற்றை மாற்ற முடியாது என்றும் கூறுகின்றன. இதனால், அவர்கள் தங்களை ஆளுகின்ற பொய்களின் அடிமைத்தனத்தில் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றார்கள்; வேதாகம சத்தியத்தின் மூலமாக கிடைக்கக்கூடிய சுதந்திரத்தைப் பெறாமல், அடிமைத்தனத்தில் இருந்து விடுபட முடியாமல் போய்விடுகிறார்கள்.

இச்சை மற்றும் பேராசை: 
சிலர், சட்டபூர்வமானதாகவோ அல்லது நன்மையளிக்காததையோ, பயனற்றததையோ பெறும் பலமான ஆசையால் நடத்தப்படுகிறார்கள் அல்லது கூடவே வைத்திருக்க வேண்டும் என்ற வலுவான ஆசையால் உந்தப்படுகிறார்கள். 

பயம்:  
நம்பிக்கையுடன் தேவனை நோக்கிப் பார்ப்பதற்குப் பதிலாக, மக்கள் பயத்தால் பிடித்துக்கொள்ளப்படுகிறார்கள். துயரமடையவைக்கும் உண்மை என்னவென்றால், அந்த பயம் அவர்களை விரக்தியில் ஆழ்த்துகிறது.

சூழ்நிலைகள்:  
சிலர் சூழ்நிலைகளுக்குப் பிணைப்பட்ட அடிமைகளாக இருந்து, உணர்ச்சிவசப்பட்டு (impulsively) நடந்துகொள்கிறார்கள். ஏசாவும் அப்படித்தான்; ஒரு முறை உணவுக்காகத் தன் பிறப்புரிமையை  உணர்ச்சி வசப்பட்டு விற்றுவிட்டான் (ஆதியாகமம் 25:30–34). அந்தச் சமயத்தில் யாக்கோபு சமைக்காமல் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்?

 பெற்றோர், உடன்பிறந்தவர்கள் மற்றும் வாழ்க்கைத் துணை:  
சிலர் தங்கள் பெற்றோர்கள் அல்லது சகோதரர்கள், வாழ்க்கைத் துணை, அல்லது குழந்தைகளை உயர்த்திக் கொண்டாடுகிறார்கள், அதுவே சமயங்களில் விக்கிரகராதனை போலாகி விடும். எனவே, அவர்கள் தேவனை மகிழ்விக்காமல், அவர்களை மகிழ்விப்பதற்காகவே செய்கிறார்கள். பக்தியில்லாத பல உறவினர்கள், பிறரை திசைதிருப்பி தீய வழியில் இழுத்துச் செல்லக்கூடியவர்கள்.

ஆறுதல்: 
சோம்பேறிகள் சௌகரியமாக வாழ விரும்புகிறார்கள். கடின உழைப்பு அவர்களுக்கு பிடிக்காது. அதனால், குறைந்த முயற்சியுடன் எளிதான வாழ்க்கையைத் தேடுகிறார்கள்.

டிஜிட்டல் வளங்கள்:  
பல இளம் தலைமுறையினர் கூகிள் அல்லது AI கருவிகளிடம் ஆலோசனை கேட்கிறார்கள். கோடிக்கணக்கான பதில்கள் வெளிப்படுகின்றன. அவை பெரும்பாலும் சரியான வழிகள் அல்ல; பெரும்பாலும் அழிவுக்குத் தூண்டும் மாயைத் தகவல்களே.

வலுவான அடித்தளம்: 
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வார்த்தையைக் கேட்டுத் தக்கபடி வாழுகிறவன், தனது வீட்டை கல்லின் மீது கட்டுகிற புத்திசாலி மனிதனைப்போல் இருக்கிறான் (மத்தேயு 7:24–27).

என் வாழ்க்கை தேவனுடைய வார்த்தையால் வழிநடத்தப்படுகிறதா? 

Rev. Dr. J.N. Manokaran