கண்ணுக்குப் புலப்படாத துன்பங்கள்

சங்கீதக்காரன், கர்த்தர் நம் பக்கத்தில் இல்லாமல் இருந்திருந்தால், நமக்கு என்ன நேர்ந்திருக்கும் என்கிறான் (சங்கீதம் 124:1). அவன் அதை ஐந்து அழகான கவித்துவ உவமைகளால் விளக்குகிறான் (சங்கீதம் 124:3–7).  தேவ ஜனங்களுக்கு காத்திருக்கும் அச்சங்கள், துன்பங்கள், சோதனைகள், கஷ்டங்கள் அதிகமாக இருக்கின்றன. ஆச்சர்யமாக, அவர்கள் உணரக்கூடிய ஆபத்துகளிலிருந்தும், அவர்கள் உணராமலும் அறியாமலும் இருக்கும் எண்ணற்ற ஆபத்துகளிலிருந்தும் தேவன் தமது ஜனங்களை காத்துக்கொள்கிறார். இன்னும், சாத்தானின் அனைத்துப் பாழாக்கும் தாக்குதல்களிலிருந்தும் தமது ஜனங்களைத் தடுக்க தேவன் கிருபையாலும், தயையாலும், இரக்கத்தாலும் அவர்களை பாதுகாக்கிறார்.

விழுங்குதல் (Swallowed):
விரோதிகள், தேவஜனங்களை உயிரோடு விழுங்கிவிட அல்லது அழித்துவிட ஆவலாக இருப்பார்கள். அதுபோலவே, சாத்தானையும் பற்களில்லாத சிங்கம் போல வர்ணிக்கலாம்; அவன் தன் இரைகளை விழுங்க விரும்புகிறான் (1 பேதுரு 5:8). அந்த சிங்கம் கர்ஜித்து, சுற்றித்திரிந்து தேவஜனங்களை அச்சுறுத்துகிறது. ஆனால் விசுவாசிகள் எதிர்த்து நின்றால், சாத்தான் அவர்களிடமிருந்து ஒடி விடுவான் (யாக்கோபு 4:7).

மூழ்கடித்தல் (Overwhelmed):
தேவஜனங்களை மூழ்கடிப்பதும் சாத்தானின் மற்றொரு தந்திரமாகும். மன அழுத்தம், கவலை, பதட்டம், உதவியற்ற நிலை, மனச்சோர்வு, நம்பிக்கையின்மை போன்றவற்றை உண்டாக்கி, அவர்களை உள்ளிருந்து தளரச் செய்கிறான். தேவனுடைய கிரியைக்கு, சாத்தானும் அவன் துஷ்ட ஆவிகளும் கடுமையான விரோதத்தை ஏற்படுத்துகின்றனர். இதனால், உணர்ச்சி குழப்பமும் உள் கலக்கமும் ஒருவரை எளிதில் மூழ்கடித்து விட முடியும்.

அழித்தெறிதல் (Swept away):
திடீர் வெள்ளம் சில நொடிகளிலே நகரங்களை கூட அழித்தெறிந்து விட முடியும். அதுபோல, சாத்தான் தேவபரிசுத்தர்கள் உழைப்பின் அளவுக்கு மீறிய பரபரப்பான வாழ்க்கையாலும், வழிதவறல்களாலும், கவனச்சிதறல்களாலும், வீண்போக்கான முயற்சிகளாலும், தேவையற்ற ஆசைகளாலும் வீழ்ந்து போகச் செய்ய விரும்புகிறான். ஆனாலும், தேவனுடைய சத்தத்தைக் கேட்டு நடக்கும் தேவஜனங்களை, அவர்களைக் காத்து நிலைநிறுத்த கர்த்தர் கிருபையோடும் இரக்கத்தோடும் பாதுகாக்கிறார்.

தூளாக்குதல் (Ground to powder):
சாத்தான் சோதனைகளையும் துன்பங்களையும் திட்டமிட்டு உருவாக்குகிறான்; மேலும், தேவஜனங்களைப் பிடிக்க தேவனிடமிருந்து அனுமதியும் பெறுகிறான். நீதிமானான யோபை தாக்க சாத்தானுக்கு தேவன் அனுமதி அளித்தார். சாத்தான், தன் பற்களை முறிக்கும் கொடூரத்தால், யோபை தூளாக்கிப் போட முயன்றான்; ஆனால் அவன் முயற்சி கைகூடவில்லை. யோபு அனுபவித்த மிகுந்த வேதனை, தூளாக்கப்படுவது போன்ற அனுபவமாக இருந்தது. எல்லா துன்பங்களையும் ஜெயித்து வெற்றி பெற, தேவன் அவனுக்கு அதிசயமான பலத்தையும் தாங்கும் வலிமையையும் அளித்தார்.

பிடிபடுதல் (Captured):
சாத்தான் ஒரு வேட்டைக்காரன் அல்லது வலை விரிப்பவன்போல, தேவஜனங்களைப் பிடிக்க வலைகளையும் கண்ணிகளையும் பதிக்கிறான். கண்ணி வெடிகளைப் போல சோதனைகளை வைக்கிறான்; ஒருவர் அதில் கால் வைத்தால், அது வெடித்து அழிவை உண்டாக்கும். தேவனுடைய வார்த்தையையும், கர்த்தரின் ஞானத்தையும் கேட்காதவர்கள், அந்த வேட்டைக்காரனான சாத்தான் அமைத்துள்ள கண்ணிகளில் விழுந்து இரையாகி விடுவார்கள் (நீதிமொழிகள் 1:17).

என்னைப் பாதுகாக்கும் தேவனின் வலிமையான கரங்களை நான் உணர்கிறேனா? 

Rev. Dr. J.N. Manokaran