சாண்டா கிளாஸை கொல்லுதல்

சில நாடுகளில், மக்கள் கிறிஸ்தவ விசுவாசத்திற்கு விரோதமாக இருக்கிறார்கள். இருந்தபோதிலும், பெரும்பாலான வணிக நிறுவனங்கள் இந்தத் திருவிழாக் காலத்தைப் பயன்படுத்தி, கிறிஸ்துமஸ் தொடர்பான அலங்காரப் பொருட்கள், அட்டைகள், கேக்குகள், நட்சத்திரங்கள், மரங்கள் போன்றவற்றை விற்கின்றன. சில சமூக விரோதிகள் ஒரு வணிக வளாகத்திற்குள் நுழைந்து, ஒரு பெரிய சாண்டா சிலையையும் பல சிறிய சிலைகளையும் சேதப்படுத்தினர். ஆனால் அடுத்த ஆண்டும், அந்த வணிக வளாகத்தில் அதே வகையான பொருட்கள் விற்பனைக்கு இருந்தன. வணிக வளாக மேலாளர், “அவர்களால் சாண்டாவை அடித்துக் கொல்ல முடியாது. ஒருவேளை அவர் அடித்துக் கொல்லப்பட்டாலும், அவர் உயிர்த்தெழுப்பப்படுவார்” என்றார். கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாடும் ஒரு குறியீடாக இருக்கும் ஒரு கதாபாத்திரத்தையே அழிக்க முடியாதபோது, தேவனுடைய குமாரனையோ அல்லது கிறிஸ்தவ விசுவாசத்தையோ எவ்வாறு அழிக்க முடியும்?

விரோதமான மதத் தலைவர்கள்:
யூத மதத் தலைவர்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின்மேல் பொறாமை கொண்டார்கள் (மத்தேயு 27:18). ஆகையால், அவர்கள் அவரை வெறுத்தார்கள்.  அவர்கள் தீவிரமாகச் செயல்பட்டு, கர்த்தரைக் கொல்லச் சதி செய்தனர். தீய நோக்கத்துடன், அவர்கள் யூதாஸைத் துரோகியாக நியமித்தனர். பகல் நேரத்தில் மட்டுமே ஆலோசனை சங்கம் கூட முடியும் என்பதால், அவர்கள் இரவில் ஒரு சட்டவிரோத ஆலோசனை கூட்டத்தை நடத்தினர். பொய்ச் சாட்சிகளை வரவழைத்து, அந்த மதக் கூட்டம் மரண தண்டனை விதித்தது, ஆனால் ரோமானியப் பேரரசின் கீழ் யாரையும் தூக்கிலிடும் அதிகாரம் அதற்கு இருக்கவில்லை.

கூட்டத்தைத் தூண்டியவர்கள்:
ஆகவே, அவர்கள் பொந்தியு பிலாத்துவின் ரோமானிய நீதிமன்றத்திற்குச் சென்றனர். இருப்பினும், இயேசு குற்றமற்றவர் என்பதை பிலாத்து கண்டறிந்தார். மதத் தலைவர்களுடன் சமரசம் செய்ய முயன்ற பிலாத்து, கொண்டாட்டக் காலத்தில் ஒரு கைதியை விடுவிக்க முன்வந்தார். இயேசுவை விடுவிப்பதற்குப் பதிலாக, அவர்கள் பரபாஸை விடுவிக்கத் தேர்ந்தெடுத்தனர். மேலும், இயேசுவின் இரத்தத்திற்காகக் கூக்குரலிடவும் பரபாஸை விடுவிக்கவும் அவர்கள் கூட்டத்தைத் தூண்டினர் (மத்தேயு 27:15-26). சுயமாகச் சிந்திக்க முடியாத ஒரு அறிவற்ற கூட்டம், தாங்கள் நம்பிய மதத் தலைவர்களால் தவறாக வழிநடத்தப்பட்டது.

 திறமையற்ற நிர்வாகம்:
பொந்தியு பிலாத்து, நியாயப்பிரமாணத்தின்படி சரியானதைச் செய்வதற்குப் பதிலாக, அநீதியும் பொல்லாப்புமான ஒரு கோரிக்கையை வைத்த பிரதான ஆசாரியனைப் பிரியப்படுத்த முயன்றான். வருந்தத்தக்க வகையில், தன் கைகளை கழுவி, இரத்தப்பழியை யூதத் தலைவர்களுக்கும் மக்களுக்கும் மாற்றினான்.

உயிர்த்தெழுதல்:
உலகப்பிரகாரமான வன்முறையாளர்களால் சாண்டா கிளாஸ் என்ற ஒரு புராணக் கதாபாத்திரத்தைத் தாக்கிக் கொல்ல முடியாதபோது, தேவனுடைய குமாரனுக்கு அவர்களால் என்ன செய்ய முடியும்? அவர்கள் ஜீவாதிபதியைக் கொன்றார்கள், ஆனால் தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினார் (அப்போஸ்தலர் 3:15). உயிர்த்தெழுந்த கிறிஸ்துவை எதுவும் தொடவோ காயப்படுத்தவோ முடியாது.

இயேசுவின் உயிர்த்தெழுதலில் நான் மகிழ்கிறேனா?

Rev. Dr. J.N. Manokaran