பக்தியுள்ளவர்களைத் தெரிந்து கொள்ளல்

ஒரு தெய்வபக்தியுள்ள பெண் இருந்தாள், அவள் அனைத்து மதரீதியான சடங்குகளையும் செய்தாள், மதப்புத்தகங்களையும் படிப்பதை வழக்கமாக கொண்டிருந்தாள். மேலும், சில புத்தகங்களை எழுதிய ஒரு குருவின் வாய்மொழி போதனைகளையும் கேட்கவும் முடிந்தது. அவ்வப்போது, தேவைப்படும் போதெல்லாம், அவள் அந்த குருவிடம் ஆலோசனையும் வழிகாட்டலையும் தேடி வந்தாள். ஒருநாள், அவளது மகள் நோயுற்றாள். அந்த நெருக்கடியான தருணத்தில், அவள் அந்த குருவிடம், தெய்வம் போல உயர்வாக மதித்தவரிடம், மகளுக்கு குணமாக ஆசி தருமாறு கேட்டாள். அவர் அவளுக்கு ஒரு பதில் கொடுத்தார்; “எந்த மனிதரின் ஆவிக்கும் மீதான அதிகாரம் எனக்கு இல்லை; அது எனக்குச் சொந்தமில்லை”. அதை கேட்ட அந்த பக்தை வியந்து, “அப்போ அது யாருக்குச் சொந்தம்?” என்று கேட்டாள். பதில் வந்தது; “ஆவி என்பது தேவனான இயேசு கிறிஸ்துவுக்குச் சொந்தமானது. மனிதரின் ஆவியைக் குறித்த எந்த அதிகாரமும் எனக்கில்லை.” அந்த பக்தை, தனது குருவை தெய்வமாக மதித்திருந்தவள், பின்னர் இயேசு கிறிஸ்துவைத் தேடத் தொடங்கினாள். இறுதியில் அவள் சுவிசேஷ ஒளியை அடைந்து மாற்றம் பெற்று, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் தீவிர சீஷியாக மாறினாள். தாவீது இப்படியாக எழுதியுள்ளார்; “கர்த்தர் பக்தியுள்ளவர்களைத் தமக்காக தெரிந்துக் கொண்டார்” (சங்கீதம் 4:3).

தேவனோடு இருத்தல்: 
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தம்மோடு இருக்கும்படியாகவே பன்னிருவரைத் தேர்ந்தெடுத்தார் (மாற்கு 3:14). அவர் அவர்களைக் தமக்கென்று பிரித்தெடுத்தார். அவரோடு இருக்க, அவரிடமிருந்து கற்க, அவரைப் பின்பற்ற, அவரைப் பின்பற்றி நடக்க அவர்கள் கர்த்தருக்காக அபிஷேகம் பண்ணப்பட்டனர். தமது மக்கள் நல் ஐக்கியத்தில் இருப்பதையே தேவன் விரும்புகிறார். உண்மையாக தேடும் பலர்,  அவர் அவர்களை நேசிப்பதாலும், அவரைத் தாமே அவர்களுக்கு வெளிப்படுத்துவதிலும், அவர்களைத் தம்மோடு இருக்கத் தேர்ந்தெடுக்கிறதாலும், அதிசயமான முறையில் ஆண்டவரை அடைகின்றனர்.

மகிழ்ச்சி: 
கர்த்தர் தம்முடைய சீஷர்களில் மகிழ்ச்சி அடைகிறார். அவர்கள் அவருக்காகச் சிறந்த காரியங்களைச் செய்யும்போது, அவர் மகிழ்ச்சியடைகிறார். பிதா, இரகசியமான விஷயங்களை சீஷர்களுக்குத் தெரியும் படியாக வெளிப்படுத்தியபோது, ஆண்டவரே மகிழ்ச்சியுடன் ஆனந்தப்பட்டார் (லூக்கா 10:21).

சிறப்பு சேவை: 
தேவன் தம்முடைய விசேஷ சேவைக்காக பக்தியுள்ளவர்களைத் தேர்ந்தெடுக்கிறார். ஒவ்வொரு சீஷரும் தனித்தன்மையுடையவராக இருக்கிறார்கள்; தேவனுடைய பெரும் திட்டத்தில் ஒரு சிறப்பான பங்கை வகிக்கிறார். யாரும் வீணானவர்கள் அல்லர். எல்லா விசுவாசிகளும் தேவனின் கரங்களால் உருவாக்கப்பட்ட சிறப்பு படைப்புகளே.

கர்த்தருக்குப் பரிசுத்தம்: 
கர்த்தராகிய ஆண்டவரின் பரிசுத்தத்தையும் பரிபூரணத்தையும் உலகிற்கு நிரூபிக்க தேவன் தம்முடைய சீஷர்களை அழைக்கிறார் (I பேதுரு 1:15-16; மத்தேயு 5:48). கர்த்தர் பரிசுத்தர் என்று வேதாகமம் மட்டுமே கற்பிக்கிறது, மேலும் அவருடைய சீஷர்கள் மட்டுமே பரிசுத்தத்தைப் பற்றிப் புரிந்துகொண்டு உலகிற்குக் கற்பிக்க முடியும்.  

நான் அவருக்கென்று தெரிந்தெடுக்கப்பட்ட ஒரு நபராக வாழ்கிறேனா?  
 

Rev. Dr. J.N. Manokaran