அற்ப விசுவாசம் வலிமையான விசுவாசத்தை சந்தித்தல்

எலியா ஒரு வல்லமையுள்ள தீர்க்கதரிசியாகவும், வலிமையான விசுவாசமுள்ளவராகவும் இருந்தார். ஆனால், தேவனின் மகிமை வெளிப்படுத்தப்படுவதற்கும், அவருடைய தேவைகள் பூர்த்தியாகுவதற்கும், அற்ப விசுவாசமுள்ள ஒரு விதவை தேவையாக இருந்தது. அதேசமயம், தேவன் எலியாவை சீதோன் என்ற  புறஜாதிகள் தேசத்திற்கு அனுப்பினார். அங்கே அவர் ஒரு ஏழை விதவையைச் சந்திக்கவேண்டியிருந்தது (1 ராஜாக்கள் 17:8-16).

விசுவாசத்தில் செழுமையாக இருந்த விதவை:
எலியா சாறிபாத்திற்கு சென்றபோது,  உலகில் தனது கடைசி உணவை சமைக்கச் விறகுகளை பொறுக்கிக் கொண்டிருந்த ஒரு விதவையைக் கண்டார்.

1. விசுவாசம்: அந்த விதவை ஒரு விசுவாசமுள்ள பெண்ணாக இருந்தார். தேவன் அவளுடைய விசுவாசத்தை உணர்ந்து, அவளது விசுவாசத்தை உறுதிப்படுத்த ஒரு விசுவாசமுள்ள மனிதர் எலியாவை அவளிடம் அனுப்பினார். பலவீனமான விசுவாசம், மந்தமான விசுவாசம், கடுகு விதையளவு விசுவாசம், சிறிய விசுவாசம் என இவை அனைத்தையும் தேவன் பார்க்கிறார், விசுவாசத்தின் உண்மையுள்ள தேவன் கவனித்து அதன் பலனை அளிக்கிறார்.

2.  விடாமுயற்சி: விடாமுயற்சியுள்ள விதவை தனது கடைசி உணவை சமைக்க விறகுகளை எடுத்துக்கொண்டிருந்தாள். அவளுக்கு, உயிருடன் இருந்த கடைசி நாள் மற்ற எல்லா நாளையும் போலவே இருந்தது. தேவன் இப்படிப்பட்ட சிரத்தையுள்ள சீஷர்களைப் பயன்படுத்துகிறார்.

3. மன அமைதி: தன்னிடம் இருந்ததைக் கொண்டு திருப்தி அடைந்த அவள், தனது கடைசி உணவை சமைக்க முடிவு செய்தாள். எலியாவுடனான உரையாடலில் எந்த கவலையும் இல்லை. அவள் மரணத்திற்கு பயப்படவில்லை, ஏனெனில் அவளது விசுவாசம் இந்த உலகத்திலிருந்து நீங்கி தேவனுடைய சந்நிதியில் என்றென்றும் நிலைத்திருக்க என கற்றுக் கொடுத்தது.

4. இரக்கமுள்ள இருதயம்: தன்னிடத்தில் இருந்ததற்காக நன்றி கொண்டவளாக, அந்த விதவை ஏதோவொன்று குறைவாக இருப்பதைப் பற்றி குறை சொல்லவோ, முனகவோ, அழவோ, வருந்தவோ இல்லை. எலியா தண்ணீர் கேட்டபோது, மகிழ்ச்சியான மனதுடன் அவர் கேட்ட தண்ணீரை எடுக்க செல்லத் தயங்காமல் புறப்பட்டாள்.

5. தாராள மனப்பான்மை: மழை இல்லாததால் தண்ணீர் பற்றாக்குறையாக இருந்தது.  ஒருவேளை, தண்ணீர் எடுக்க அவள் அதிக தூரம் பயணிக்க வேண்டியிருக்கலாம் அல்லது தண்ணீர் வாங்க விலை கொடுக்க வேண்டியிருக்கலாம்.  ஆனாலும் அவள் தண்ணீர் கொடுக்க தயாராக இருந்தாள்.

தேவனின் வாக்குறுதி 
அவளுக்கு, அதுதான் குறைந்த வளங்களைக் கொண்ட கடைசி உணவு.  எதிர்காலம் ஒரு மர்மமாக இருந்தது, அதாவது சிரமமாக இருக்கக்கூடும். இருப்பினும், விசுவாசத்தில், அவள் முதல் பகுதியை தீர்க்கதரிசிக்குக் கொடுக்க வேண்டியிருந்தது, பின்னர் அவளிடம் இருந்தவை பஞ்சம் முடியும் வரை போதுமானதாக இருக்கும். இது ‘அழிவிலிருந்து செல்வாக்கு’ என்ற கதையாக அல்ல, 'அழிவிலிருந்து வளங்களுக்கு' என்ற கதையாக இருந்தது.

மனிதர்களிடம் அற்ப விசுவாசம் இருந்தாலும் தேவன் அவர்களைப் பயன்படுத்துகிறார் என்பதை நான் உணர்கிறேனா? 

Rev. Dr. J.N. Manokaran