அதிக தீங்கு

பவுல் தீமோத்தேயுவுக்கு எழுதிய கடிதங்களில், அலெக்சாந்தர் என்ற ஒருவரைப் பற்றிச் குறிப்பிடுகிறார். ஆரம்பத்தில் அவர் கர்த்தரின் விசுவாசியான சீஷராக இருந்தார். ஆனால் பின்னாளில் அவர் தவறான வழியில் நடந்து, விசுவாசத்திலிருந்து விலகி, அதனால் அவரது விசுவாசம் என்னும் கப்பல் முறிந்து போனதுபோல் ஆகிவிட்டது (1 தீமோத்தேயு 1:20). பின்னர், பவுல் மறுபடியும் தீமோத்தேயுவுக்கு எழுதும் போது, அலெக்சாந்தர் தீமையைச் செய்தவனாக இருந்ததாகவும், அவனிடமிருந்து எச்சரிக்கையாக, புத்திசாலித்தனமாக நடக்கும்படி கூறுகிறார் (2 தீமோத்தேயு 4:14-15).

கொல்லன்:
அலெக்சாந்தர் ஒரு கொல்லன்; அவன் விக்கிரகங்கள் செய்திருக்கலாம். விக்கிரகங்களைச் செய்ய வேண்டாமென அறிவுறுத்தப்பட்டதால், அவன் கோபமடைந்து விசுவாசத்தை விட்டு விலகியிருக்கலாம். பவுலுக்கு தீங்குச் செய்பவனாகவும், மற்ற விசுவாசிகளுக்கு ஆபத்தானவனாகவும் மாறினான். எனவே பவுல், அவனிடம் இருந்து எச்சரிக்கையாக இருக்கும்படி தீமோத்தேயுவை எச்சரிக்கிறார் (1 தீமோ 1:20; 2 தீமோ 4:14–15).

எங்கள் வார்த்தைகளை எதிர்த்தான்:
பவுல், அலெக்சாந்தர் எங்களின் வார்த்தைகளுக்கு எதிர்த்தான் என்று எழுதுகிறார். இது நீதிமன்றத்தில் அவன் பவுலின் வார்த்தைகளை தவறாக விவரித்ததாக இருக்கலாம். எபேசு நகரில் பவுலின் பிரசங்கம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது; ஆர்த்தமிசின் சிறிய கோயில்கள் மற்றும் விக்கிரகங்களின் விற்பனை குறைந்தது. இதனால் கொல்லர்கள் சங்கத் தலைவரான தெமெத்திரியு கலவரத்தை ஏற்படுத்தினான். அந்த நேரத்தில், யூதர்கள் பவுலுடன் தொடர்பு இல்லையென விளக்க அலெக்சாந்தர் மேடையில் பேச முயன்றான். ஆனால் கூட்டம் அவனையும் நிராகரித்தது.

தகவல் அளிப்பவர்கள்: 
ரோமப் பேரரசில், சிலர் மற்ற குடிமக்களை உளவு பார்த்து, பொய்யான குற்றச்சாட்டுகளுடன் அதிகாரிகளிடம் புகார்கள் அளித்தனர். அலெக்சாந்தரும் அப்படியொரு தகவலாளியாக இருந்திருக்கலாம். அவன், கிறிஸ்தவர்கள் சீசரைக் வணங்குவதில்லை என்றும், அவர்கள் கிறிஸ்துவின் சரீரத்தைப் புசிக்கிறார்கள் என்றும் அவன் தெரிவித்திருக்கலாம்.
 
எச்சரிக்கை: 
அலெக்சாந்தர் பவுலுக்கு எதிராகக் குற்றம் செய்து, தீங்கு செய்ததால், அவனுடைய வெறுப்பு, பொறாமை மற்றும் கோபம் தீமோத்தேயுவிற்கும் எதிராக வெளிப்படக்கூடும். பவுலுக்கு எதிராக அவன் இருந்த கடுமையான விரோதம், தீமோத்தேயுவுக்கும் எதிராகவே இருக்கும். எனவே, தீமோத்தேயு விழிப்புடன் தயாராக இருக்க வேண்டும்.

தெய்வீக நீதி காத்திருப்பு:
பவுல் பழிவாங்க முயலவில்லை. மாறாக, சரியான நேரத்தில் தேவன் தன் நீதியான தீர்ப்பை வழங்குவார் என்ற நம்பிக்கையுடன் அவனைக் கர்த்தரிடமே ஒப்புவித்தார்.

தீங்கு செய்பவர்கள்: 
பவுலும் தீமோத்தேயுவும் அதிக தீங்கைச் சந்தித்தது போல, இன்று கர்த்தருடைய சீஷர்களும் அதிக தீங்கைச் சந்திக்கிறார்கள். முதலில், அது அகந்தை மற்றும் பொறாமையாக இருக்கலாம். இரண்டாவதாக, சத்தியம் அவர்களின் வாழ்க்கையை, குடும்பங்களை, செல்வாக்கை மற்றும் வாழ்வாதாரத்தை பாதிக்கிறது. மூன்றாவதாக, சிலர் மற்றவர்களுக்குத் தீங்கு செய்வதில் திருப்தி அல்லது மகிழ்ச்சியையோ பெறுகிறார்கள். நான்காவதாக, சாத்தான் அவர்களை அநீதியின் கருவிகளாகப் பயன்படுத்தலாம். ஐந்து, கிறிஸ்தவர்கள் எந்த காரணமும் இல்லாமல் வெறுக்கப்படுகிறார்கள் (யோவான் 15:25).

நான் பாம்பைப் போல வினாவுள்ளவனாகவும், புறாவைப் போல கபடற்றவனாகவும் இருக்கின்றேனா?  (மத்தேயு 10:16

Rev. Dr. J.N. Manokaran