கண்களைத் திறவுங்கள்

குருடான கண்கள்:
சாத்தான் மக்களின் மனதை அல்லது புலன் உணர்வுகளை குருடாக்கிவிட்டான்.  எனவே, அவர்களால் சத்தியத்தை அறியவும், நற்செய்தியைப் பெறவும், இரட்சிப்புக்கான வழியைப் புரிந்துகொள்ளவும் முடியவில்லை.

மங்கலான பார்வை:
சுவிசேஷத்தால் தொடப்பட்ட சீஷர்களுக்கு தொடர்ந்து மங்கலான பார்வை அல்லது தரிசனம் தெளிவற்றதாக உள்ளது.  "நடக்கிற மனுஷரை மரங்களைப்போலக் காண்கிறேன் என்றான்" (மாற்கு 8:24).  குருடனுக்குப் பார்வை கிடைத்தாலும் அது மங்கலாக காணப்பட்டது.  ஆண்டவர் மீண்டும் அவன் கண்களைத் தொட வேண்டியதாக இருந்தது. தேவ வார்த்தையின் சத்தியத்தின் தொடுதல் ஒரு தெளிவான பார்வையை அல்லது தரிசனத்தை வழங்குகிறது.

 பார்வைமழுக்கம் (கிட்டப்பார்வை):
சீஷர்களுக்கு சில சமயங்களில் கிட்டப்பார்வை பிரச்சனை இருக்கும்.  அவர்களுக்கு அருகில் உள்ளவற்றை நன்கு பார்க்க முடியும் ஆனால் தொலைவில் இருப்பதை பார்க்க இயலாது.  கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சீஷர்களால் நித்திய ராஜ்யத்தை உணர முடியவில்லை, அது தற்காலிகமாக இருக்க வேண்டும் எனவும்,  எருசலேமில் மேசியா ஆட்சி செய்ய அமர வேண்டும் என அவர்கள் விரும்பினர்.

எட்டப் பார்வை (ஹைபரோபியா):
இது ஒரு பார்வை நிலை, அத்தகைய மக்கள் தொலைவில் உள்ளவற்றைக் காண முடியும், ஆனால் அருகில் உள்ளவற்றைப் பார்க்க முடியாது.  சில சீஷர்கள் மிகவும் பரலோக எண்ணம் கொண்டவர்கள், அவர்கள் பூமியில் வாழ விசித்திரமானவர்கள் (முரண்பாடானவர்கள்). 
 
கண்புரை:
நீரிழிவு, முதுமை, காயம் மற்றும் பிற போன்ற காரணங்களினால் கண்புரை ஏற்படலாம்.  இது மங்கலான பார்வை, பிரகாசமான விளக்கு வெளிச்சங்கள் கண் கூச்சத்தை ஏற்படுத்தும் மற்றும் வண்ணங்கள் மங்கலாகத் தோன்றும்.  கூச்ச சுபாவமுள்ள சீஷர்கள், வார்த்தையைப் படிப்பதில்லை; மேலும் ஆர்வத்தையும், முதல் அன்பையும், அர்ப்பணிப்பையும் இழக்கிறார்கள்.

பார்வை வட்டு அல்லது குருட்டுப் பொட்டு:
பார்வை வட்டு அல்லது குருட்டுப் பொட்டு என்ற பகுதியில்தான் நரம்பு திசுக்கள் இணைந்து பார்வை நரம்பை உருவாக்குகின்றன. இந்தப் பீடத்தினுள்ளே பார்வை செல்கள் இல்லாததால் அங்கு ஒரு சிறிய பார்வையற்ற புள்ளி இருக்கிறது. பார்வை நரம்பு விழித்திரையுடன் இணைக்கும் இடத்தில் ஒளி-உணர்திறன் செல்கள் இல்லை, எனவே அந்த இடத்தைப் பார்க்க முடியாது.  சத்தியத்தின் ஒளி வாழ்க்கையின் சில பகுதிகளை மாற்றாது என்பதால், சீஷர்களுக்கு குருட்டுப் புள்ளிகள் இருக்கலாம்.  இனவெறி அல்லது சாதிவெறி பல விசுவாசிகளுக்கு ஒரு குருட்டுப் புள்ளியாக இருக்கலாம். இந்த இருட்டான பகுதியைக் குறித்து எச்சரிக்கையாக இருப்பது அவசியம். 

மந்தக்கண்:
ஒரு கண்ணின் அசாதாரண வளர்ச்சியானது மந்தக்கண்ணை ஏற்படுத்தும், சில நபர்கள் ஒரு கண்ணை மட்டுமே அதிகமாகப் பயன்படுத்தலாம்.  வேலை செய்பவர்கள், நீண்ட நேரம் திரையைப் பார்ப்பவர்கள் அல்லது பார்த்துக் கொண்டிருப்பவர்கள் மந்தக் கண்ணை பெறலாம்.  மந்தமான கண்களைக் கொண்ட சீஷர்கள், தெய்வீகப் பார்வையும் அல்லது தரிசனமும் அல்லது கண்ணோட்டமும் இல்லாமல் இருக்கலாம்.

வண்ணக் குருட்டுத்தன்மை (நிறக்குருடு):
உலகத்துடன் சமரசம் செய்து கொள்ளும் அல்லது ஒத்துப் போகும் சீஷர்கள் நிறக்குருடு உள்ளவர்களைப் போன்றவர்கள்.

மாறுகண் (ஸ்ட்ராபிஸ்மஸ்):
இது கண்களுக்கு இடையே ஒருங்கிணைப்பு இல்லாதது.  ராஜ்யத்தின் மீதான ஒற்றைக் கவனம் மற்றும் அதை முதன்மையாக எண்ணாத சீஷர்கள் ஸ்ட்ராபிஸ்மஸால் பாதிக்கப்பட்டவர்கள் என்றே சொல்ல வேண்டும்.

 எனக்கு தெளிவான தரிசனம் இருக்கிறதா?
 

 

Author: Rev. Dr. J .N. மனோகரன்