பனியில் தவம்

இமயமலையில், பல துறவிகள் உள்ளனர், மற்றவர்களால் செய்ய முடியாதளவு தங்கள் வாழ்நாளெல்லாம் கடினமான தவம் செய்பவர்கள் உண்டு.   ஒரு சிலர், பல ஆண்டுகளாக ஒற்றைக் காலில் நிற்கிறார்கள் அல்லது பல ஆண்டுகளாக மரக்கிளையில் தலைகீழாகத் தொங்குகிறார்கள்.   சமீபத்தில், சமூக ஊடகங்களில் ஒரு துறவி பனியில் மூழ்கி அமர்ந்திருக்கும் புகைப்படம் இருந்தது, வெப்பநிலை மைனஸ் இருபத்தி இரண்டு டிகிரி சென்டிகிரேடில் இருந்தது. 

 உடல் திறன்:  
 மனக் கட்டுப்பாட்டின் மூலம் உடலைக் கட்டுக்குள் கொண்டு வருவது சாத்தியம்.   இதற்கு கடுமையான ஒழுக்கம், வலுவான மன உறுதி, கவனம் மற்றும் இடைவிடாத பயிற்சி தேவை.   ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வது அல்லது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடிப்பது போன்றது இத்தகைய திறமை.  கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சொன்னார்;  “மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன?” (மாற்கு 8:36). 

நோக்கம்:  
இவ்வுலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் தேவனால் இவ்வுலகிற்கு அனுப்பப்பட்டவர்கள்.   உலகத்தில் தம்முடைய நோக்கத்தை நிறைவேற்ற தேவன் அவர்களை அனுப்பியுள்ளார்.   ஒரு நபர் தேவ நோக்கத்தை நிறைவேற்றும்போது, தேவன் மகிமைப்படுத்தப்படுகிறார்.   பாலைவனங்களில் அல்லது குகைகளில் அல்லது மலைகளில் அமர்ந்து தவம் செய்வது உலகத்தில் ஈடுபடுவதற்குப் பதிலாக உலகத்தை விட்டுத் தப்பித்தல் ஆகும்.   சிலருக்கு, உலகில் உள்ள சோதனை மிகவும் கடினமாக உள்ளது, நல்ல ஒழுக்கமான வாழ்க்கையை வாழ உலகத்திலிருந்து தப்பிக்க விரும்புகிறார்கள்.   ஆனால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மக்களிடையே வசிப்பதும் சோதனையை வெல்வதும் சாத்தியம் என்பதை நிரூபித்தார். 

 மற்றவர்களுக்கு ஆசீர்வாதம்:  
 ஒரு நபர் பனிக்கு மத்தியில் தவம் செய்யலாம், அதனால் பாதிக்கப்படவில்லை.  ஆனால் இது தங்குமிடம் அல்லது ஸ்வெட்டர்களை வாங்க முடியாத, கடுமையான குளிர்காலத்தில் வாழும் ஏழை மக்களுக்கு உதவும் ஒரு நுட்பத்தை உருவாக்குமா?   அப்படி இல்லையெனில், அவர் சுயநலவாதி மற்றும் முட்டாள், தன்னை இரட்சித்துக் கொள்ள முயற்சிக்கிறார். 

 ஆவிக்குரிய குறைபாடு:  
 பாவத்தின் சம்பளம் மரணம் என்பதால், அனைவரும் பாவிகள் என்றும், பாவங்களுக்கான தண்டனையை செலுத்த முடியாது என்றும் வேதாகமம் போதிக்கிறது (ரோமர் 3:23; 6:23). எனவே, இரட்சிப்பைப் பெறவோ சம்பாதிக்கவோ முடியாது;  ஆனால் விசுவாசிப்பதினால் பெறுகிறோம்.   ஆம், விசுவாசிக்கிறவர்களுக்கு விலையேறப்பெற்ற இரட்சிப்பை பரிசாகக் கொடுப்பதற்காக, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மரித்தார், அடக்கம் செய்யப்பட்டார், மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார்.   எந்தவொரு உடல் வலிமையும் அல்லது மன சுறுசுறுப்பும் பாவங்களை மன்னிக்கும் ஆவிக்குரிய ஆசீர்வாதத்திற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது.

 என் பாவங்கள் மன்னிக்கப்பட்டுள்ளதா? நான் பாக்கியம் பெற்ற நபரா? 

 Author: Rev. Dr. J .N. மனோகரன்