வளர மறுத்தல்

சில நேரங்களில் மேலாளராக இருப்பது பெரியவர்களைப் பால்யக்குழந்தைகளைப் போல பார்த்துக்கொள்ளும் வேலைபோல் தோன்றுகிறது,” என்று ஒரு நிர்வாகி கூறினார் (இந்துஸ்தான் டைம்ஸ், 4 செப்டம்பர் 2025). ஊழியர்கள் வளர விரும்பவில்லை; பொறுப்பு ஏற்க, உரிமையுணர்வு கொள்ள, முனைப்பு காட்ட, பணியை முடியும் வரை பொறுமையாக முயற்சிக்க என எதையும் செய்ய மறுக்கிறார்கள். கொரிந்துவில் உள்ள விசுவாசிகளின் ஆவிக்குரிய வளர்ச்சி இல்லாமையைப் பார்த்தும் பவுல் இதேபோன்ற ஏமாற்றத்தை அனுபவித்தார்.

மூன்று வகையான மனிதர்கள்:
பவுல் மூன்று வகைகளைப் பற்றி எழுதுகிறார். முதல், இயல்பான மனிதன்; ஆதாம், ஏவாள் சந்ததியாவான்; கர்த்தர் இயேசு கிறிஸ்துவை நிராகரிக்கிறான்.
இரண்டாவது, மீண்டும் பிறந்து ஆவியில் நடக்கிற ஆவிக்குரிய மனிதன் (1 கொரிந்தியர் 2:14–15).
மூன்றாவது, சரீரப்பிரகாரமான (மாம்ச/உடல்) மனிதன், மீண்டும் பிறந்திருந்தும், இன்னும் பிள்ளை நிலையை விட்டு வளராதவர். அதாவது மனதில் மாற்றமும் புதுப்பிப்பும் அதிகமாகத் தெரியாமல், இயல்பான மனிதனைப் போலவே வாழ்கிறவன் (1 கொரிந்தியர் 3:1). இந்த சரீரப்பிரகாரமான விசுவாசி பரலோகப் பயணத்தில் இருக்கிறார்; ஆனால் மெதுவாகவும்,  நிலையற்றவராகவும் இருக்கிறார்.

வீழ்ச்சியடைந்த இயல்பு:
சரீரப்பிரகாரமான மனிதன் என்பது பாவத்திற்கான பலவீனம் அல்லது ஈர்ப்பால் பாதிக்கப்பட்டவர். இது பாவிகளான எல்லா மனிதர்களுக்கும் பொதுவான ஒன்று. பல நேரங்களில் மாம்ச இச்சைகள், உலக ஆசைகள், உணர்ச்சி அழுத்தங்கள் ஆகியவை அவரை முற்றிலும் ஆள்கொள்ளும். எதிர்த்து வெல்ல தேவையான ஆவிக்குரிய வலிமை அவரிடம் இல்லாததால், அவை அவரை எளிதில் அடக்கி விடுகின்றன.

திட உணவு:
தேவவார்த்தை குழந்தைகளுக்கு பாலாகவும், முதிர்ந்தவர்களுக்கு மாமிசமாகவும் இருக்கிறது. ஒரு விசுவாசி தேவவார்த்தையைத் தியானித்து, வாழ்க்கையில் செயல்படுத்தும் ஒழுக்கத்தில் பயிற்சி பெறவில்லை என்றால், திட உணவை ஜீரணிக்கத் தேவையான ஆவிக்குரிய வளர்ச்சியை அடைய முடியாது. அவர்களிடம் புதுப்பிக்கப்பட்ட மனம் குறைபாடாக இருக்கும் (ரோமர் 12:2). அவர்கள் அறிந்ததை கீழ்ப்படியாதபோது, அதற்குப் பிறகு அதிகமாகக் கற்கவும், வளரவும் முடியாது. ஆவியினால் நடத்தப்படுவதற்கு பதிலாக, உலகின் கண்ணோட்டம் மற்றும் சத்தத்தினால் நடத்தப்படுகிறார்கள் (கலாத்தியர் 5:16).

குப்பை உணவு (Junk food):
இன்னொரு காரணம்; அதிக அளவில் ‘குப்பை உணவு’ அல்லது   ஊறுகாய், ஜாம், சாஸ் போன்றவற்றை எடுத்துக்கொள்வதைப் போன்றது. அதைப் போலவே, மனித ஞானம், சொற்பொழிவு திறமை, அழகான பேச்சுத் திறன் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட போதனைகள் மற்றும் கற்பிப்புகள். அவர்களின் ருசிகரமான உணர்வுகள் இப்படிப்பட்ட குப்பை உணவுகளுக்கு பழகி விட்டதால், திட உணவை ஏற்க முடியவில்லை.

போதிய ஊட்டச்சத்து இல்லாதவர்கள்:
முதலில், அவர்களுக்கு தேவவார்த்தைக்கான பசி இல்லை.
இரண்டாவது, இப்படிப்பட்ட விசுவாசிகள் ஆவிக்குரிய ஆலோசனை, வலிமை, ஞானம் ஆகியவற்றிற்காக எப்போதும் பிறரிடம் சார்ந்திருப்பவர்கள்.

எனக்கு ஆரோக்கியமான ஆவிக்குரிய வாழ்வு இருக்கிறதா? 

Rev. Dr. J.N. Manokaran