செல்ஃபிகள் மற்றும் லைஃப் ஜாக்கெட்டுகள்

படகு விபத்து சாவ் பாலோ கடற்கரையில், கர்காண்டா டோ டியாபோ என்று அழைக்கப்படும் பகுதியில் நடந்ததாக அறிக்கைகள் விரிவாகக் கூறுகின்றன, அதை பிசாசின் தொண்டை அல்லது மிடறு என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. விருந்துக்கு வந்தவர்கள் வேறு ஒரு படகில் தரையிறங்க கொண்டு செல்லப்பட்டபோது, ​​அந்த சிறிய படகு அலையில் மோதி, ஏழு பேரையும் தண்ணீரில் தள்ளியது. 27 மற்றும் 37 வயதான இரண்டு பிரேசிலிய பெண் செல்வாக்குமிக்கவர்கள், படகின் விதியை மீறினார்கள், செல்பி எடுப்பதற்காகவும் தங்கள் சருமத்திற்காகவும் உயிர் பாதுகாப்பு ஜாக்கெட்டுகளை அணிய மறுத்தனர், பின்பு தண்ணீரில் மூழ்கி இறந்தனர் (People.com, அக்டோபர் 30, 2024).

பிசாசின் தொண்டை அல்லது மிடறு:
சுவாரஸ்யமாக, எதிர்பாராத நீரோட்டங்கள் காரணமாக விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் இந்த இடம் பிசாசின் தொண்டை என்று பெயரிடப்பட்டது, இதன் விளைவாக இறப்புகள் ஏற்பட்டன.  சாத்தான், உஷாராகவும் விழிப்புடன் இல்லாதவர்களையும் விழுங்கத் தயாராக அலைந்து திரிகிறான் மற்றும் கர்ஜிக்கும் சிங்கமாக விவரிக்கப்படுகிறான் (1 பேதுரு 5:8).

உயிர் பாதுகாப்பு ஜாக்கெட்டுகள்:
உயிர் பாதுகாப்பு ஜாக்கெட் அணிவதன் நோக்கம் காயம் மற்றும் மரணத்திலிருந்து பாதுகாப்பதாகும். இந்த ஜோடி அவற்றை அணிய மறுத்து, மரணத்திற்கு வழிவகுத்தது. கோடிக்கணக்கான மக்கள் ஜீவனளிக்கும் நற்செய்தியின் செய்தியை மறுக்கிறார்கள். அப்படி, அவர்கள் நற்செய்தியை மறுக்கும்போது, ​​அவர்கள் நித்திய மரணத்தைத் தெரிவு செய்கிறார்கள் என்றே அர்த்தம்.

செல்ஃபி:
அவர்கள் ஒரு உயிர் பாதுகாப்பிற்கான உடை இல்லாமல், செல்ஃபி எடுக்க விரும்பினர். அவர்களுக்கு, அது வாழ்க்கையில் ஒரு பயனற்ற காரியம் முக்கியமானதாக இருந்தது, அதை விட்டுவிட முடியாது. அவர்களைப் போலவே, மக்களும் இரட்சிப்பைத் தேடுவதற்குப் பதிலாக சுயநலத்தாலும், பாவ இன்பங்களாலும் இயக்கப்படுகிறார்கள்.

சருமப் பாதுகாப்பு:
சூரிய ஒளியில் நேரடியாக வெளிப்படுவதன் மூலம், அவர்கள் தங்கள் சருமத்தை மற்றும் அழகை மேம்படுத்த விரும்பினர், துரதிர்ஷ்டவசமாக, அவர்களுக்கு, வெளிப்புற அழகு அவர்களின் உயிரை விட முக்கியமானது.

கடவுளின் முழு கவசம்:
விசுவாசிகளுக்கு, பவுல் தேவனுடைய முழு கவசத்தையும் அணிய அறிவுறுத்துகிறார் (எபேசியர் 6: 10-18). இது ஒரு விருப்பமல்ல, ஆனால் அனைத்து சீஷர்களுக்கும் அவசியமானது. மறுப்பது கடுமையான காயத்திற்கு வழிவகுக்கும். இரட்சிப்பின் தலைக்கவசம், நீதியின் மார்புக் கவசம் அல்லது குண்டு துளைக்காத அங்கி, சத்தியத்தின் கச்சை, எதிரியின் அக்கினி அம்புகளின் தாக்குதலில் இருந்து பாதுகாக்க விசுவாசத்தின் கேடயம், சமாதானத்தின் நற்செய்தியுடன் கால்களுக்கு காலணிகளை அணிதல், எதிரியைத் தாக்கி அடிக்க தேவ வார்த்தையாகிய ஆவியின் வாள் போன்றவைகள் தேவனுடைய சர்வாயுதவர்க்கங்களாகும். 

நான் தேவனின் முழு கவசத்தையும் அணிந்திருக்கிறேனா? 

Rev. Dr. J.N. Manokaran