வழக்கறிஞரான இயேசுகிறிஸ்து

எந்தவொரு நபரும் தன்னை குற்றமற்றவர் என்பதை உலகத்திற்கு  நிரூபிக்க வேண்டுமென்றால், நீதிமன்றத்தில் ஒரு வழக்கறிஞர் தேவை. ஒரு நபர் குற்றவாளியாக இருந்தாலும், தங்கள் கட்சிக்காரர் நிரபராதி என்று நீதிபதிகளை நம்ப வைக்கும் அளவுக்கு  அவர்களின் புத்திசாலித்தனத்தையும் வாததிறமைகளையும் பயன்படுத்தும் புத்திசாலித்தனமான வழக்கறிஞர்கள் உள்ளனர். இருப்பினும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மனித நீதிமன்றங்களில் செயல்படும் வழக்கறிஞர் அல்ல.  இந்த வழக்கறிஞர்  நீதியுள்ளவர் என்று யோவான் எழுதுகிறார்.  " ஒருவன் பாவஞ்செய்வானானால் நீதிபரராயிருக்கிற இயேசுகிறிஸ்து நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார் (1 யோவான் 2:1). மனிதனுடைய நீதிமன்றங்களில், வக்கீல்கள் தன் கட்சிக்காரரின் உரிமை என்றும்,  அவர் அப்பாவி என்றும்,  சந்தேகத்தின் அடிப்படையை வைத்தும்  மற்றும் நீதிபதிகளின் கனிவானதன்மை என்ற அடிப்படையிலும் வாதிடுகின்றனர்.  ஆனால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வேறு வகையான வழக்கறிஞர்.

1) உரிமைகள்:

 பாவம் செய்தவனுக்கு மன்னிப்பிற்கான எந்த ‘உரிமைகளும்’ இல்லை.  ஆகவே, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தான் செய்த தியாகம், மரித்தது மற்றும் உயிர்ந்தெழுந்தது என்ற அடிப்படையில் பரலோகத்திலுள்ள பிதாவிடம் மன்றாடுகிறார். இதனை அவருடைய சீஷர்கள் விசுவாசத்தினால் நாடுகிறார்கள்.  கர்த்தராகிய இயேசு ஒரு வித்தியாசமான வழக்கறிஞர், அவர் தனது கட்சிக்காரருக்காக தன்னையும் பாவிகளோடு அடையாளப்படுத்திக் கொண்டு வாதாடுகிறார்.

 2) அப்பாவித்தனம்:

மனித நீதிமன்றத்தில், வழக்கறிஞர்கள் தங்கள் கட்சிக்காரர் அப்பாவி என்று வாதிடுவார்கள்.  அதை நிரூபிக்க, அவர்கள் அவருடைய அப்பாவித்தனத்திற்கான ஆதாரங்களை அவர்கள் தயாரிக்கக்கூடும்.  ஆனால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தனது பிள்ளைகள் ‘அப்பாவிகள்’ மட்டுமல்ல ‘நீதியுள்ளவர்கள்’ என்பதையும் நிரூபிக்க போராடுகிறார்.  பாவிகள் நீதியுள்ளவர்களாக அறிவிக்கப்படுகிறார்கள், ஏனென்றால் கர்த்தராகிய இயேசு பாவத்தின் தண்டனையையும் சாபத்தையும் தானே எடுத்துக்கொண்டு நியாயத்தையும் நீதியையும் பரிசாக வழங்கியுள்ளாரே (ரோமர் 5: 1).

 3) சந்தேகத்தின் நன்மை:

குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஆதரவாக மனித நீதிமன்றங்கள் ‘சந்தேகத்தின் பயனை’ அனுமதிக்கின்றன.  அதற்கு பதிலாக, தேவனுடைய நீதிமன்றத்தில், அது ‘விசுவாசத்தின் பலன்’ என வெகுமதியாக அளிக்கப்படுகிறது.  கர்த்தராகிய இயேசு வழக்கறிஞராக மன்றாடுகிறார், பிதாவாகிய தேவனிடமிருந்து ‘விசுவாசத்தின் பலனை’ பெற்றுத் தருகிறார்.

4) நீதிபதிகளின் கனிவானதன்மை:

வழக்கறிஞர்கள் நீதிபதியின் இரக்கத்திற்காகவும், கனிவான தன்மைக்காகவும் மன்றாடுகிறார்கள், மேலும் அவர்களின் நல்ல தன்மையையும் அல்லது தாராள மனப்பான்மையையும் வெளிக்கொணரும்படி கேட்டுக்கொள்கிறார்கள். ஆனால்  கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தேவனுடைய நியாயத்தின் படியும் 'தேவனுடைய நீதியின் படியும் தண்டித்து விடாதபடி கேட்டுக்கொள்கிறார், மேலும்  ‘கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால்’ கழுவப்பட்ட பின்  தேவனானவர் ஒரு பாவியை மீண்டும் தண்டிக்க மாட்டார்.

ஒவ்வொரு நாளும் எனக்காக வாதிடும் வழக்கறிஞராகிய இயேசு கிறிஸ்துவுக்கு நான் நன்றி கூறுகிறேனா? என சிந்திப்போம்.

Author: Rev. Dr. J .N. மனோகரன்