"சிந்தனை என்பது மிகக் கடினமான வேலை, அதுதான் மிகச் சிலரே அதில் ஈடுபடுவதற்குக் காரணமாக இருக்கலாம்" என்பதாக ஹென்றி ஃபோர்டு கூறினார். இந்த உலகத்தை ஆள்பவனாகிய சாத்தான் விசுவாசம் இல்லாதவர்களின் மனதைக் குருடாக்கினான். அவர்களால் கிறிஸ்துவின் நற்செய்தியின் ஒளியைப் பார்க்க இயலாது. கிறிஸ்துவின் மகிமைக்குரிய நற்செய்தியையும் அறியார்கள் (2 கொரிந்தியர் 4:4). நற்செய்தி ஒளி ஒரு நபர் மீது பிரகாசிக்கும்போது, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மகிமையைக் காண மனம் திறக்கப்படுகிறது. ஒரு கிறிஸ்தவரின் மனம் திறந்திருந்தால் தான் சிந்திக்கக முடியும், அதை பிரதிபலிக்க முடியும் மற்றும் தியானிக்க முடியும்; மேலும் இதுவே அனுதின பழக்கமாகும். “நான் சொல்லிக்கொண்டிருக்கிற விஷயங்களைப் பற்றி எண்ணிப்பார். இவை பற்றிய முழுமையான அறிவை கர்த்தர் உனக்குத் தருவார்” என்பதாக பவுல் அறிவுறுத்துகிறார் (2 தீமோத்தேயு 2:7). எல்லா மதங்களிலும், கிறிஸ்தவ விசுவாசமே மனதை ஈடுபடுத்துகிறது, அதே சமயம் மற்ற ஆன்மீகம் மனதை இழக்கிறது அல்லது அமைதிப்படுத்துகிறது அல்லது வெறுமையாக்குகிறது. துரதிர்ஷ்டவசமாக, பல கிறிஸ்தவர்கள் ஆவிக்குரிய ரீதியாக அலுவலாகவே இருக்கிறார்கள், ஆனால் அறிவுபூர்வமாக சோம்பேறிகளாக இருக்கிறார்கள்.
கர்த்தரிடத்தில் அன்புகூருங்கள்:
கர்த்தர் தம்முடைய சீஷர்களுக்கு முதல் கட்டளையாக “உன் தேவனாகிய கர்த்தரை நேசிக்க வேண்டும். முழு இதயத்தோடும் ஆத்துமாவோடும் முழு மனதோடும் அவரை நேசிக்க வேண்டும்” என்று கற்றுக் கொடுத்தார் (மத்தேயு 22:37). இது மன கட்டமைப்பு இல்லாத, வெறும் உணர்ச்சிபூர்வமான நேசம் அல்ல,
புரிதலுடன் பாடுங்கள்:
கொரிந்து நகரத்தில் உள்ள விசுவாசிகளுக்கு பவுல் கர்த்தரை சரியான முறையில் ஆராதிக்கும்படி எழுதுகிறார். அவர்கள் ஆவியிலும் புரிதலுடனும் கர்த்தரை துதித்துள்ளனர் (1 கொரிந்தியர் 14:15). இது குருட்டு நம்பிக்கையின் வெளிப்பாடு அல்ல, மாறாக சத்தியத்தால், கர்த்தரை அடிப்படையாகக் கொண்டு ஈர்க்கப்பட்ட அறிவுசார் நம்பிக்கை.
மனதை புதுப்பியுங்கள்:
பவுல் தனது வாசகர்களை தங்கள் மனதைப் புதுப்பிக்க அழைக்கிறார் (ரோமர் 12:2). புதுப்பிக்கப்பட்ட மனம் உலகின் போக்குகளையோ அல்லது மரபுகளையோ பின்பற்றுவதில்லை, மாறாக சத்தியத்தைப் பின்பற்றுகிறது.
தியானியுங்கள்:
கிறிஸ்தவ தியானம் என்பது தேவனின் வார்த்தையை சிந்திப்பது, தியானிப்பது மற்றும் செரிமானம் செய்வதாகும் மற்றும் இது 24/7 செயலாகும்.
மனதை வெறுமையாக்கும் மற்ற தியானங்களைப் போலல்லாமல், கிறிஸ்தவ தியானம் என்பது மனதின் செயலில் ஈடுபடுவதாகும். கிறிஸ்தவ நம்பிக்கை என்பது ஒரு சிந்தனையற்ற நம்பிக்கை அல்ல.
உங்கள் விசுவாசத்தை விளக்குங்கள்:
ஒரு கிறிஸ்தவரின் வாழ்க்கை முறையைப் பார்த்து உலகம் குழப்பமடைகிறது. விசுவாசிகளிடமிருந்து விசுவாசத்திற்கான காரணத்தை அவர்கள் அறிய விரும்புகிறார்கள். எனவே, விசுவாசிகள் அல்லாதவர்களின் தேடல் மற்றும் கேள்விகளுக்கு விளக்க, வரையறுக்க அல்லது பதில்களை வழங்க எப்போதும் தயாராக இருக்குமாறு அப்போஸ்தலனாகிய பேதுரு சீஷர்களை அறிவுறுத்துகிறார் (1 பேதுரு 3:15).
சிந்திப்பதற்கான முன்னுதாரணம்:
கிறிஸ்தவ சிந்தனைக்கு பவுல் ஒரு முன்னுதாரணத்தை வழங்குகிறார்; “இப்போது சகோதர சகோதரிகளே! தொடர்ந்து உங்கள் மனதில் உண்மையும், பெருமையும், நீதியும், தூய்மையும், அன்பும், அழகும், மரியாதையும், உயர்வும் கொண்ட எல்லாவற்றையும் சிந்தித்துக்கொள்ளுங்கள்” (பிலிப்பியர் 4:8).
நான் சிந்திக்கும், புரிந்துகொள்ளும் மற்றும் விளக்கும் கிறிஸ்தவனா/கிறிஸ்தவளா?
Rev. Dr. J.N. Manokaran