எச்சரிக்கை, தண்டனை மற்றும் தீர்ப்பு

2025 ஆரம்பத்தில் காட்டுத்தீ லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தை எரித்தது. சில பிரசங்கியார்கள் இதை தேவனுடைய தீர்ப்பு என்றும், வெளிப்படுத்தினபுத்தகத்தில் சொல்வதுபோல கடைசி காலங்கள் தொடங்கியிருக்கலாம் என்றும் கூறினார்கள். இதை  சபைக்குள்ளும் இருக்கும் சில கிறிஸ்தவர்களும், சபைக்கு வெளியே இருக்கும் சிலரும் இதுபோன்ற செய்திகளைக் கண்டித்தனர். இப்படியான பேரழிவுகள், விபத்துகள், சேதங்கள் எல்லாம் தேவனுடைய எச்சரிக்கையோ, தண்டனையோ, தீர்ப்போ ஆக இருக்கலாம். ஆம்! எல்லா தேவனுடைய தீர்ப்பும், தண்டனையும் மனமாற அழைக்கும் எச்சரிக்கையாக இருக்கின்றன.

எச்சரிக்கை:
நல்லவர்களுக்கு மட்டுமே நல்லது நடக்கும், தீயவர்களுக்கு மட்டுமே தீமை நடக்கும் என்று நினைப்பது இயல்பானது. கடவுள் நல்லவர்களுக்கு மட்டுமே நல்லது செய்ய அனுமதிக்க வேண்டும் என்பது மக்களின் விருப்பம். இருப்பினும், தவறான சிந்தனையை கர்த்தர் சரிசெய்தார். அந்த மனநிலையுடன், சிலர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடம் இரண்டு சம்பவங்களைக் குறித்து கேள்வி எழுப்பினர். 
சீலோவாமிலே கோபுரம் விழுந்தபோது கொல்லப்பட்ட பதினெட்டுப் பேர் மற்றும் பொந்தியு பிலாத்து பலியுடனே கலந்த மனித இரத்தம் (லூக்கா 13:1-15). கர்த்தருடன் பேசிய மக்கள் கலிலேயர்கள் குற்றமற்றவர்கள் என்று நினைத்தார்கள், ஆனால் நீங்கள் மனந்திரும்பாவிட்டால், நீங்களும் அழிந்து போவீர்கள் என்று அவர் அவர்களுக்கு நினைவூட்டினார். அனைவரும் குற்றவாளிகள், இப்போதும் குற்றவாளிகள். (ரோமர் 3:23). இப்படியான சம்பவங்கள், விபத்துகள் போன்றவை, மக்கள் தூக்கத்திலிருந்து விழித்தெழ, மனந்திரும்ப, தேவனுடன் நல்ல உறவை ஏற்படுத்த வேண்டும் என்று எச்சரிக்கையாக இருக்கின்றன. 

தண்டனை:
ஆயீயோடு யுத்தம் செய்தபோது இஸ்ரவேல் தேசம் தோல்வியடைந்தது. இது ஒரு தண்டனையாக இருந்தது, ஏனெனில் இஸ்ரவேல் பாவம் செய்திருந்தது. அந்தப் பாவத்தை ஒருவரே செய்திருந்தாலும், அவரது குடும்பத்தினர் அதை எதிர்க்காமல் உடந்தையாக இருந்தனர். ஆகவே, தேவன் முழு ஜனத்தின்மேலும் தண்டனை விதித்தார் (யோசுவா 7:11). அந்த ஒரு பாவத்துக்காக முழு ஜனங்கள் தண்டிக்கப்படுவதற்குக் காரணம், அவர்கள் தங்களுடைய சமுதாயத்துக்குள் பாவம் புகுந்துவிட அனுமதித்ததற்கும், அதனை தடுப்பதில் கவனமாக இருக்காததற்கும் தான்.

தீர்ப்பு:
ஆகானும் அவனுடைய குடும்பத்தினரும் பாவம் செய்ததற்காக தேவன் தண்டனை கூறினார். அவர்கள் கல்லெறிந்து கொல்லப்பட்டார்கள் (யோசுவா 7:25-26). இந்த தண்டனை தனிப்பட்டதாக இல்லாமல், மக்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்படி பொது நிகழ்வாக நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம், தேவனுடைய கட்டளைகளை மீறினால் கடுமையான விளைவுகள் ஏற்படும் என்று அனைவருக்கும் ஒரு கடும் எச்சரிக்கையாக இருந்தது. தேவனுடைய தீர்ப்புக்கான மற்றொரு எடுத்துக்காட்டு பார்வோனையும் அவனது அறுநூறு ரதங்களையும் வீரர்களுடன் செங்கடலில் மூழ்கடித்தது. பார்வோன் எபிரேய ஜனங்களின் ஆண் குழந்தைகளை நைல் நதியில் மூழ்கடிக்க உத்தரவிட்டான். அதை நினைவில் கொண்டு, தேவன் பார்வோனையும், அறுநூறு ரதங்களையும் வீரர்களுடன் செங்கடலில் மூழ்கடித்து தண்டித்தார். எபிரேயரின் புதிதாகப் பிறந்த ஆண் குழந்தைகளை நைல் நதியில் மூழ்கடிக்க பார்வோன் கட்டளையிட்டான். தண்ணீரில் மூழ்கடிப்பதன் மூலம் கர்த்தர் நீதியாக பழிவாங்கினார். (யாத்திராகமம் 15:4). இது தேவனுடைய நீதியான தீர்ப்பை காட்டுகிறது; பாவத்திற்கு ஏற்ப தக்க தண்டனை வழங்கப்படும். இது போன்ற நிகழ்வுகள், தேவன் பரிசுத்தமானவரும், நியாயமானவரும் என்பதைக் காட்டுகின்றன. மேலும், பாவத்தைக் குறைக்கும் வகையில் மக்களுக்கு ஒரு எச்சரிக்கையாகவும் அமைகின்றன.

நான் மனந்திரும்பவில்லை என்றால், நான் அழிந்து போவேன் என்பதை உணருகிறேனா?
 

Rev. Dr. J.N. Manokaran