நகரங்களில் இருக்கும் பொல்லாத ஆலோசகர்கள்

உலகில், எப்போதும் தீய ஆலோசகர்கள், துன்மார்க்கமாக நடப்பவர்கள், சில துயரத்திற்குரியவர்கள் மற்றும் சிலர் மட்டுமே நம்பகமானவர்கள் என கலந்தே இருப்பார்கள் (சங்கீதம் 1:1; யோபு 16:2). தேவன் எசேக்கியேலிடம் பேசினார், அந்த நகரத்தில் இருபத்தைந்து பொல்லாத ஆலோசகர்கள் இருந்ததாகவும், அவர்களில் இருவர் பிரபலமானவர்களாகவும், மிகவும் செல்வாக்கு மிக்கவர்களாகவும் இருந்தனர் என்றும் கூறினார் (எசேக்கியேல் 11:1-3)‌. இருப்பினும், ஒரு பாக்கியவான் துன்மார்க்கரின் ஆலோசனையின்படி நடப்பதில்லை.

தேவனுக்கு தெரியும்:
ஒரு நகரத்தில் எத்தனை பொல்லாத ஆலோசகர்கள் இருந்தார்கள் என்பதை தேவன் சரியாக அறிந்திருந்தார். அந்த பொல்லாத தவறாக வழிநடத்தும் தலைவர்களுக்கு எதிராக உண்மையான செய்தியையும் தீர்க்கதரிசனத்தையும் கொடுக்க தேவன் எசேக்கியேலுக்குக் கட்டளையிட்டார். கள்ளத் தீர்க்கதரிசிகளின் மனதில் உருவாகும் தீய எண்ணங்களை தான் அறிந்திருப்பதாக தேவன் கூறினார் (எசேக்கியேல் 11:5-6). அவரிடமிருந்து எதுவும் மறைக்கப்படவில்லை.

 தவறான செய்தி: 
பொல்லாத ஆலோசகர்கள் எப்போதும் தவறான செய்திகளையும், தவறான தகவல்களையும், தவறான விளக்கங்களையும் கொடுத்து, மக்களை வழிதவறச் செய்கிறார்கள்.  தீர்க்கதரிசிகளான எரேமியாவும் எசேக்கியேலும் எருசலேம் நகரத்தின் மீது நியாயத்தீர்ப்பை அறிவித்தபோது, அந்த செய்திக்கு முரண்பட்டனர்  (எரேமியா 29:5). “தீர்க்கதரிசிகளாகிய நீங்கள் பொய்களைச் சொல்கிறீர்கள். உங்களது பொய்கள் நல்ல ஜனங்களைப் புண்படுத்துகின்றன. அந்த நல்ல ஜனங்கள் புண்படுவதை நான் விரும்புவதில்லை. நீங்கள் கெட்ட ஜனங்களை ஆதரிக்கிறீர்கள், உற்சாகப்படுத்துகிறீர்கள். அவர்களின் வாழ்வை மாற்றும்படி நீங்கள் அவர்களிடம் சொல்வதில்லை. அவர்களின் வாழ்வைக் காப்பாற்ற நீங்கள் முயல்வதில்லை!” (எசேக்கியேல் 13:22).

தவறான நம்பிக்கை: 
துன்மார்க்க ஆலோசகர்களின் செய்தி பொதுவாக அமைதி, செழிப்பு, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மை பற்றியே இருக்கும்.  நகரம் இறைச்சித் துண்டுகள் மூடப்பட்ட கொப்பரையில் பாதுகாப்பாக இருப்பது போல பாதுகாப்பானது என்று கள்ளத் தீர்க்கதரிசிகள் அறிவித்தனர்.  எனவே, மக்கள் வீடுகளைக் கட்டி பாபிலோனியர்களின் படையெடுப்பைப் புறக்கணிக்க வேண்டும்.  அவர்கள் மக்களுக்கு தவறான நம்பிக்கையை அளித்தனர். 

மறுவிளக்கம் செய்யப்பட்ட உருவகம்:
பொய்யான தீர்க்கதரிசிகள் பயன்படுத்திய உருவகத்தை எசேக்கியேல் மறுவிளக்கம் செய்தார்.  அவர் அவர்களின் நம்பிக்கையை அழிவாக மாற்றினார்.  எருசலேம் என்பது உணவைப் பாதுகாப்பாக சேமித்து வைக்கும் ஒரு துறட்டி அல்ல, மாறாக இறைச்சி சமைக்கப்பட நெருப்பின் மேல் இருக்கும் பானை என்று எசேக்கியேல் கேலியாகக் கூறினார் (எசேக்கியேல் 11:7-10). அதாவது எருசலேம் கைப்பற்றப்பட்டு அந்நியர்களின் கைகளில் ஒப்படைக்கப்படும்.

வளைந்த விகிதம்:
25 பொல்லாத ஆலோசகர்களும் பொய்யான தீர்க்கதரிசிகளும் இருந்தபோது, ​​ஒரே ஒரு உண்மையான தீர்க்கதரிசி மட்டுமே இருந்தார். இந்தப் பொல்லாத தலைவர்களின் உரத்த சத்தமும் இருந்தது. எசேக்கியேலின் குரலும் சத்தமாகவும் தெளிவாகவும் இருந்தது. ஆனாலும், பெரும்பாலான மக்கள் அந்தக் காலத்தில் கள்ளத் தீர்க்கதரிசிகளை நம்பத் தெரிவு செய்தனர், இன்றும் அதே தான் நடக்கிறது. துரதிர்ஷ்டவசமாக, இன்று சமூக ஊடகங்கள் மூலம் பொல்லாத குரல்கள் அதிகமாகவே பெருகிவிட்டன.

 என்னைச் சுற்றியுள்ள பொல்லாத குரல்களுக்கு மத்தியில் நான் சத்தியத்தை மாத்திரம் பேசுகிறேனா 

Rev. Dr. J.N. Manokaran