சங்கீதம் 8

சங்கீதம் 8

1 எங்கள் ஆண்டவராகிய கர்த்தாவே, உம்முடைய நாமம் பூமியெங்கும் எவ்வளவு மேன்மையுள்ளதாயிருக்கிறது! உம்முடைய மகத்துவத்தை வானங்களுக்கு மேலாக வைத்தீர்.

2 பகைஞனையும் பழிகாரனையும் அடக்கிப்போட, தேவரீர் உம்முடைய சத்துருக்களினிமித்தம் குழந்தைகள் பாலகர் வாயினால் பெலன் உண்டுபண்ணினீர்.

3 உமது விரல்களின் கிரியையாகிய உம்முடைய வானங்களையும், நீர் ஸ்தாபித்த சந்திரனையும், நட்சத்திரங்களையும் நான் பார்க்கும்போது,

4 மனுஷனை நீர் நினைக்கிறதற்கும், மனுஷகுமாரனை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம் என்கிறேன்.

5 நீர் அவனை தேவதூதரிலும் சற்று சிறியவனாக்கினீர்; மகிமையினாலும் கனத்தினாலும் அவனை முடிசூட்டினீர்.

6 உம்முடைய கரத்தின் கிரியைகளின்மேல் நீர் அவனுக்கு ஆளுகைதந்து, சகலத்தையும் அவனுடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தினீர்.

7 ஆடுமாடுகளெல்லாவற்றையும், காட்டுமிருகங்களையும்,

8 ஆகாயத்துப் பறவைகளையும், சமுத்திரத்து மச்சங்களையும், கடல்களில் சஞ்சரிக்கிறவைகளையும் அவனுடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தினீர்.

9 எங்கள் ஆண்டவராகிய கர்த்தாவே, உம்முடைய நாமம் பூமியெங்கும் எவ்வளவு மேன்மையுள்ளதாயிருக்கிறது.

Related Topics/Devotions

நன்மைக்கான அடையாளம் - Rev. Dr. J.N. Manokaran:

நம்புவதற்காக ஒரு அடையாளத்தை Read more...

கழுதை பரலோகம் செல்லுமா - Rev. Dr. J.N. Manokaran:

செல்வந்தர்களில் சிலர் தங்கள Read more...

யாத்ரீக பயணத்தில் வலிமையைக் கண்டறிதல் - Rev. Dr. J.N. Manokaran:

கிறிஸ்தவ வாழ்க்கை என்பது பர Read more...

துன்புறுத்துபவர்கள் அழிந்து போகிறார்கள் - Rev. Dr. J.N. Manokaran:

ரோமப் பேரரசர் டயோக்ளீஷியன் Read more...

இருதயத்தை ஒருமுகப்படுத்துதல் - Rev. Dr. J.N. Manokaran:

தாவீது, “என் இருதயத்த Read more...

Related Bible References